சென்னை: சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் 40 லட்சம் லிட்டர் மழை நீரை சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரை சேகரித்து, சேமித்து, மறுபயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் ஒரு முறையாகும். இது நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், வறட்சியைத் தடுக்கவும், வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், கூரைகளில் இருந்து மழைநீரை சேகரித்து, நிலத்தடி தொட்டிகளில் சேமித்து வைக்கும் அமைப்புகளாகும். மேலும், மழைநீரை […]
