வசிரிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலுக்கு வழக்கம் போல் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறது பாகிஸ்தான்

இஸ்லாமபாத்: ​பாகிஸ்​தானின் வடக்கு வசிரிஸ்​தான் மாவட்​டத்​தில் உள்ள கைபர் பக்​துன்​குவா பகு​தி​யில் நேற்று முன்​தினம் ராணுவத்​தினரின் வாக​னங்​கள் சென்று கொண்​டிருந்​தன. அவற்​றின் மீது வெடிகுண்​டு​கள் ஏற்​றிவந்த வாக​னம் மோதி​ய​தில் பாக். ராணுவ வீரர்​கள் 16 பேர் உயி​ரிழந்​தனர்.

இத்​தாக்​குதலுக்கு தெக்​ரிக் – இ-தலி​பான் என்ற பாகிஸ்​தான் தலி​பான் அமைப்​பின் தற்​கொலைப்​படை பிரி​வான ஹபிஸ் குல் பகதூர் பொறுப்​பேற்​றது. ஆனால், பாகிஸ்​தானின் ராணுவம் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘இந்​தி​யா​வின் ஆதரவு பெற்ற தீவிர​வா​தி​கள், வெடிகுண்டு வாக​னத்தை ராணுவத்​தினர் வாக​னங்​கள் மீது மோதி தாக்​குதல் நடத்​தினர்’’ என தெரி​வித்​துள்​ளது.

இந்​தியா மறுப்பு: இதற்கு மறுப்பு தெரி​வித்​து உள்ள வெளி​யுறவுத்​துறை செய்தி தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால், ‘‘வசிரிஸ்​தானில் கடந்த 28-ம் தேதி நடை​பெற்ற தற்​கொலைப்​படை தாக்​குதலுக்கு இந்​தியா மீது பாகிஸ்​தான் ராணுவம் குற்​றம் சுமத்​தி​யுள்​ளது. இதை நாங்​கள் வன்​மை​யாக மறுக்​கிறோம்​’’ என கூறி​யுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.