பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் முடக்கம்

புதுடெல்லி: எ​திர்க்​கட்​சிகளின் அமளி​யால் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் நேற்று முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது. ஆபரேஷன் சிந்​தூர், பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி உள்ளிட்ட பல்​வேறு விவ​காரங்​களை எழுப்பி எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தொடர் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதன் காரண​மாக தொடர்ச்சி​யாக 5 நாட்​கள் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் முடங்​கின.

இதைத் தொடர்ந்து கடந்த 28, 29 ஆகிய தேதி​களில் ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பாக மக்​களவை​யில் சிறப்பு விவாதம் நடை​பெற்றது. கடந்த 29, 30 ஆகிய தேதி​களில் மாநிலங்​களவை​யில் சிறப்பு விவாதம் நடை​பெற்​றது. இதன்​பிறகு நேற்று காலை 11 மணிக்கு நாடாளு​மன்​றம் கூடியது. மக்​களவை தொடங்​கியதும் பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை எதிர்த்து காங்​கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கோஷம் எழுப்​பின. அவையை நடத்த முடி​யாத சூழலில் பிற்​பகல் 2 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

பிற்​பகல் 2 மணிக்கு மக்​களவை மீண்​டும் கூடியது. அப்​போதும் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதன்​காரண​மாக பிற்​பகல் 4 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. மீண்​டும் அவை கூடிய​போது வழக்​கம்​போல எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் கோஷமிட்​டனர். எனவே நாள் முழு​வதும் மக்​களவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

மாநிலங்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும் பிஹார் வாக்​காளர் பட்​டியல் விவ​காரத்தை எழுப்பி எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் கோஷமிட்​டனர். இதனால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. மீண்​டும் மாநிலங்​களவை கூடிய​போது அமளி தொடர்ந்​த​தால் பிற்​பகல் 2 மணி வரை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

பிற்​பகலில் மாநிலங்​களவை கூடிய​போது அதே அமளி நிலை நீடித்​த​தால் மாலை 4.30 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. அதன்​பிறகும் அமளி தொடர்ந்​த​தால் நாள் முழு​வதும் மாநிலங்​களவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி விவ​காரத்​தால் நா​டாளு​மன்​றத்​தின் இரு அவை​களும்​ நேற்​று முழு​மை​யாக ​முடங்​கின.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.