பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பொறுப்பு டிஜிபி​யாக வெங்​கட​ராமனை தமிழக அரசு நியமித்துள்ளது.

தமிழக டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் ​பணி ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து பணி மூப்பு அடிப்​படை​யில் தற்​போது டிஜிபிக்​களாக உள்ள சீமா அகர்​வால், ராஜீவ்கு​மார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர் டிஜிபி​யாக வரலாம் என்ற எதிர்​பார்ப்பு எழுந்தது.

வழக்​க​மாக புதிய சட்​டம்- ஒழுங்கு டிஜிபி பணி​யிடம் காலி​யாக உள்ள 3 மாதங்​களுக்கு முன்பே தமிழக அரசு அடுத்த தகு​தி​யான 8 பேரின் பட்​டியலை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்பி வைக்​கும். அதில், 3 பேர் பட்​டியலை ஆணை​யம் தமிழக அரசுக்கு மீண்​டும் அனுப்​பும். அதில், ஒரு​வரை தமிழக அரசு புதிய சட்​டம் – ஒழுங்கு டிஜிபி​யாக நியமிக்​கும்.

தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் 8 மாதங்​களில் நடை​பெற உள்ள நிலை​யில், டிஜிபி சங்​கர் ஜிவாலுக்கு பணிநீட்​டிப்பு வழங்கப்படும் என முதலில் கூறப்​பட்​டது. ஆனால், அவர் இன்றுடன் (31-ம் தேதி) ஓய்வு பெறு​வது உறுதி ஆகி​விட்​டது. இந்​நிலை​யில் இந்த விவ​காரத்​தில் திடீர் திருப்​ப​மாக பொறுப்பு டிஜிபி​யாக நிர்​வாக பிரி​வில் இருந்த வெங்​கட​ராமனை தமிழக அரசு நியமிக்க முடிவு செய்​தது. இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெங்​கட​ராமன் நாகப்​பட்டினம் மாவட்​டத்தைச் சேர்ந்​தவர். 1968-ல் பிறந்த இவர், 1994-ல் ஐபிஎஸ் ஆக தேர்​வாகி தமிழகத்தில் பல்​வேறு மாவட்​டங்​களில் பணி​யாற்​றி​னார். குறிப்​பாக முக்​கி​யம் வாய்ந்த சிபிசிஐடி தலை​மை​யிடம் மற்​றும் நிர்​வாக பிரிவி​களில் பணி​யாற்றி அரசின்​ பா​ராட்​டை பெற்​றவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.