தமிழகத்துக்கு 20.22 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை: அக்​டோபர் மாதத்​துக்​கான 20.22 டி.எம்​.சி தண்​ணீர் தமிழகத்​துக்கு வழங்க வேண்​டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்​டத்​தில் தமிழக அரசு வலி​யுறுத்தி உள்​ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 44-வது கூட்​டம், ஆணை​யத்​தின் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தார் தலை​மை​யில் டெல்​லி​யில் இருந்து காணொலி வாயி​லாக நேற்று நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​தில் தமிழ்​நாடு உறுப்​பினர் மற்​றும் நீர்​வளத்​துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன், காவிரி தொழில்​நுட்​பக் குழு​மம் மற்​றும் பன்​மாநில நதிநீர்ப் பிரிவு தலை​வர் இரா.சுப்​பிரமணி​யம் உள்​ளிட்​டோர் சென்னை தலைமை செயல​கத்​தில் இருந்து காணொலிக் காட்சி வாயி​லாக கலந்து கொண்​டனர்.

கூட்​டத்​தில் தமிழ்​நாடு உறுப்​பினர் மற்​றும் நீர்​வளத்​துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன், செப்​.25-ம் தேதி மேட்​டூர் அணை​யின் நீர் இருப்பு 92.105 டி.எம்​.சி-ஆக உள்​ளது என்​றும், அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 8,419 கன அடி​யாக உள்​ளது என்​றும் தெரி​வித்​தார்.

கணிசமான நீர் இருப்பு: மேலும், கர்​நாடக அணை​களின் நீர் இருப்பு மற்​றும் நீர்வரத்து கணிச​மான அளவு தொடர்ந்து வரு​வ​தால், தமிழகத்​துக்கு இந்​தாண்டு அக்​டோபர் மாதத்​துக்கு வழங்​கப்பட வேண்​டிய நீர் அளவான 20.22 டி.எம்​.சி. நீரினை உச்​ச நீ​தி​மன்ற ஆணை​யின்​படி கர்​நாடகம் பில்​லிகுண்​டுலு​வில் உறு​தி​செய்ய தமிழ்​நாடு சார்​பில் ஆணை​யத்​திடம் வலி​யுறுத்​தி​னார்.

மேலாண்மை ஆணைய தலை​வர் இதனை பரிசீலனைக்கு எடுத்​துக்​கொண்​டார். கர்​நாடகத்​துக்கு இதுகுறித்த உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.