கர்நாடக குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தாயகம் திரும்ப உதவி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்​நாடகா மாநிலம் உத்தர கன்​னடா மாவட்​டத்​தில் கோகர்ணா அரு​கே​யுள்ள‌ ராமதீர்த்த மலை குகை​யில் ரஷ்​யாவை சேர்ந்த நினா குடினா (40) தனது 2 மகள்​களு​டன் வசித்து வந்​தார். அவரது பாஸ்​போர்ட் தொலைந்து விட்​ட​தால், கடந்த 6 ஆண்​டு​களாக அங்கு சட்ட விரோத​மாக தங்​கி​யிருந்​தது தெரிய வந்​தது.

இதையடுத்து கர்​நாடக போலீ​ஸார் அவரை மீட்டு கடந்த ஜூலை​யில் அரசு காப்​பகத்​தில் தங்க வைத்​தனர். இந்​நிலை​யில் நினா குடி​னா​வின் கணவர் ட்ரோர் ஷலோமா கோல்ட்​ஸ்​டெ​யின் கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மனு ஒன்றை தாக்​கல் செய்​தார்.

அதில், “தனது மனைவி, மகள்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்​கள் காணா​மல் போய்​விட்​டன. மத்​திய அரசு இந்த விவ​காரத்​தில் உடனடி​யாக தலை​யிட்​டு, என் மனை​விக்கு உரிய ஆவணங்​களை வழங்க வேண்​டும். ரஷ்​யா​வுக்கு அனுப்பி வைக்க வேண்​டும்​”என கோரி​னார்.

இந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிபதி பி.எம்​.ஷி​யாம் பிர​சாத் நேற்று தீர்ப்பை வெளி​யிட்​டார். அதில், “மத்​திய வெளி​யுறவுத் துறை ரஷ்ய அரசுடன் பேசி நினா குடினா சொந்த நாட்​டுக்கு திரும்​புவதற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். வரு​கிற அக்​டோபர் 9-ம் தேதிக்​குள் அவரும், 2 மகள்​களும் ரஷ்​யா​வுக்கு செல்​வதை மத்​திய அரசு உறு​திபடுத்த வேண்​டும்.

மனு​தா​ரர் ட்ரோர் ஷலோமா கோல்ட்​ஸ்​டெ​யின் தாக்​கல் செய்த ஆவணங்​களில் மகள்​கள் தொடர்​பாக போது​மான ஆதா​ரங்​கள் இல்​லை. எனவே 2 மகள்​களும் தங்​களது தா​யுடன் ரஷ்​யா​வுக்​கு செல்​ல வேண்​டும்​” என்​று உத்​தர​விட்​டார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.