மும்பை,
மராட்டியத்தின் சதாரா பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 12.09 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 17.37 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 73.73 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
மராட்டியத்தின் சதாரா பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
Related Tags :