750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து மைசூருவில் தசரா ஜம்பு சவாரி ஊர்வலம்

பெங்களூரு: கிபி 1610-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்​வடி கிருஷ்ண​ராஜ உடை​யார் மன்​னர், போரில் வென்​றதை முன்னிட்டு விஜயதசமி காலக்​கட்​டத்​தில் தசரா விழாவை 10 நாட்​கள் கொண்​டாட தொடங்​கி​னார். கடந்த 1947-ல் நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு, கர்​நாடக அரசின் சார்​பில் அரசு விழா​வாக‌ தசரா கொண்​டாடப்​படு​கிறது.

415-வது ஆண்​டாக தசரா விழாவை புக்​கர் பரிசு வென்ற கன்னட எழுத்​தாளர் பானு முஸ்​தாக் கடந்த 22-ம் தேதி மைசூரு சாமுண்​டீஸ்​வரி அம்​மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்​தார். தசரா விழாவையொட்டி மைசூரு அரண்​மனை, சாமுண்​டீஸ்​வரி கோயில், கிருஷ்ண​ராஜ​சாகர் அணை, ரயில் நிலை​யம், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் உள்​ளிட்​டவை வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டன‌.

கடந்த 9 நாட்​களும் உணவு திரு​விழா, திரைப்பட திரு​விழா, கிராமிய விழா, மலர்க் கண்​காட்​சி, பொருட்​காட்​சி, இசைக் கச்​சேரி, இலக்​கிய விழா மற்​றும் கன்னட கலை பண்​பாட்டை பறை​சாற்​றும் நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன.

தசரா திரு​விழா​வின் இறுதி நாளான நேற்று விஜய தசமியை முன்​னிட்டு நண்​பகல் 12.15 மணிக்கு மைசூரு அரண்​மனை​யில் உள்ள நந்​தி​கொடிக்கு முதல்​வர் சித்​த​ராமை​யா​வும், துணை முதல்​வர் டி.கே.சிவகு​மாரும் பூஜை செய்​தனர். மைசூரு அரண்​மனை​யில் பாரம்​பரிய முறைப்​படி நவராத்​திரி பூஜை செய்​து, மன்​னரும் பாஜக எம்​பி​யு​மான‌ யது​வீர் தனி​யார் தர்​பார் நடத்​தி​னார்.

இதைத் தொடர்ந்து முதல்​வர் சித்​த​ராமையா மாலை 4.40 மணிக்கு ‘ஜம்போ சவாரி’ என அழைக்​கப்​படும் யானை​களின் ஊர்​வலத்தை தொடங்கி வைத்​தார். 56 வயதான அபிமன்யூ யானை 750 கிலோ எடை கொண்ட தங்க அம்​பாரி​யில் சாமுண்​டீஸ்​வரி அம்​மன் வீற்​றிருக்​கும் சிலையை சுமந்து ராஜ வீதி​யில் ஊர்​வல​மாக சென்​றது.

இதை பின்​தொடர்ந்து ரூபா, காவேரி, ஸ்ரீகண்​டா, தனஞ்​செ​யா, மஹேந்​தி​ரா, கஜன், பீமா, ஏகலை​வா, லட்​சுமி உள்​ளிட்ட யானை​கள் அலங்​கரிக்​கப்​பட்டு கம்​பீர​மாக சென்​றன. ராஜவீ​தி​யில் தொடங்​கிய ஜம்பு சவாரி, பன்னி மண்​டபத்​தில் நிறைவடைந்​தது. கடந்த 10 நாட்​களும் கோலாகல​மாக நடை​பெற்ற மைசூரு தசரா திரு​விழா நேற்​றுடன் நிறைவடைந்​தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.