இந்திய பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – பாக்.,பயங்கரவாதி எச்சரிக்கை

இஸ்லாமாபாத்,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி லஷ்கர்-இ-தொய்பா உள்பட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால் பாக்., உலக வரைபடத்தில் இருக்காது என கூறிய இந்திய ராணுவ தளபதி கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என பாகிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய லஷ்கர்-இ-தொய்பா துணைத்தலைவர் சைபுல்லா, ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மே 10 ஆம் தேதி நாம் செய்து காட்டியதைப் போல் பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அசீம் முனீருக்கு கோரிக்கை விடுப்பதாகவும் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.