ஆசிய இளையோர் கபடி போட்டி: இந்திய ஆடவர்- மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்

மனாமா,

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் மனாமா நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.

இதில் கபடி போட்டியில் இந்திய ஆடவர்- மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது .இறுதிப்போட்டியில் இந்திய ஆண்கள் அணி ஈரானை 35-32 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது. அதேபோல் பெண்கள் அணியும் ஈரானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 75-21 என்ற கணக்கில்வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.இந்த வெற்றிகளால் இந்தியாவின் மொத்த பதக்கங்கள் 10 ஆக உயர்ந்துள்ளன (2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்). தற்போதைய பதக்கப் பட்டியலின்படி, சீனா 7 தங்கப் பதக்கங்களுடன் முன்னிலை வகிக்கிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.