வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: ஜவஹர்லால் நேரு குடும்பம் மீது சசி தரூர் விமர்சனம்

புதுடெல்லி: ​வாரிசு அரசி​ய​லால் இந்​திய ஜனநாயகத்​துக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டிருக்​கிறது என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார்.

சர்​வ​தேச ஊடக​மான புராஜெக்ட் சிண்​டிகேட், செக் குடியரசை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படு​கிறது. இதில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் ‘இந்​திய அரசி​யல் – குடும்ப வணி​கம்’ என்ற தலைப்​பில் எழு​தி​யிருக்​கும் கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் கிராம பஞ்​சா​யத்து முதல் நாடாளு​மன்​றம் வரை குடும்ப அரசி​யல் வியாபித்து பரவி இருக்​கிறது. நாடு சுதந்​திரம் அடைந்​தது முதல் இந்​திய அரசி​யலில் ஜவஹர்லால் நேரு குடும்​பம் ஆதிக்​கம் செலுத்தி வரு​கிறது. நாட்​டின் முதல் பிரதம​ராக நேரு பதவி​யேற்​றார்.

இதன் பிறகு அவரது மகள் இந்​திரா காந்தி பிரதம​ரா​னார். அடுத்து அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதம​ராக பதவி வகித்​தார். தற்​போது நேரு குடும்​பத்தை சேர்ந்த ராகுல் காந்தி மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருக்​கிறார். அவரது தங்கை பிரி​யங்கா காந்தி எம்​.பி.​யாக உள்​ளார். இந்​தி​யா​வின் ஒவ்​வொரு கட்​சி​யிலும் ஒவ்​வொரு பிராந்​தி​யத்​தி​லும் வாரிசு அரசி​யல் நீடித்து வரு​கிறது.

ஒடி​சா​வில் பிஜு ஜனதா தள தலை​வர் நவீன் பட்​நாயக், மகா​ராஷ்டி​ரா​வில் சிவசேனா உத்​தவ் அணி​யின் தலை​வர் உத்​தவ் தாக்​கரே, உத்தர பிரதேசத்​தில் சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வாரிசு அரசி​யலின் உதா​ரணங்​களாக உள்​ளனர்.

ஜம்மு காஷ்மீரில் அப்​துல்லா குடும்​பத்​தினரும் முப்தி குடும்​பத்​தினரும் ஆதிக்​கம் செலுத்​துகின்​றனர். பஞ்​சாபில் சிரோமணி அகாலிதளத்​தில் வாரிசு அரசி​யல் தொடர் கதை​யாக நீடிக்​கிறது. அந்த கட்​சி​யின் தலை​வர் பிர​காஷ் சிங் பாதலுக்கு பிறகு அவரது மகன் சுக்​பீர் சிங் தற்​போது கட்சி தலை​வ​ராக பதவி வகிக்​கிறார். தெலங்​கா​னா​வின் பிஆர்​எஸ் கட்​சி​யில் வாரிசு அரசி​யல் போர் நடக்​கிறது. அந்த கட்​சி​யின் தலை​வர் சந்​திரசேகர ராவின் மகனும் மகளும் கட்சி தலை​மையை கைப்​பற்ற நேரடி மோதலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

தமிழ்​நாட்​டில் கருணாநிதி குடும்​பத்​தினர் திமுகவை தங்​கள் கட்​டுப்​பாட்​டில் வைத்து உள்​ளனர். கருணாநி​தி​யின் மகன் மு.க. ஸ்டா​லின் தற்​போது தமிழக முதல்​வ​ராக பதவி வகிக்​கிறார். கருணாநி​தி​யின் பேரன் (உதயநி​தி) கட்​சி​யின் அடுத்த வாரி​சாக முன்​னிறுத்​தப்​பட்டு வரு​கிறார். நாடு முழு​வதும் 11 மத்​திய அமைச்​சர்​கள், 9 முதல்​வர்​கள் வாரிசு அரசி​யலின் உதா​ரணங்​களாக விளங்​கு​கின்​றனர்.

வாரிசு அரசி​ய​லால் இந்​திய ஜனநாயகத்​துக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டிருக்​கிறது. திறமையை புறந்​தள்ளி வாரிசுகளுக்கு முன்​னுரிமை அளிப்​ப​தால் ஆட்சி நிர்​வாகத்​தில் பெரும் பின்​னடைவு ஏற்​பட்டு வரு​கிறது. வாரிசு அரசி​யல் பிரச்​சினைக்கு தீர்வு காண அடிப்​படை சீர்த்​திருத்​தங்​கள்​ அவசி​ய​மாகிறது. இவ்​வாறு அதில்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.