ஆசியாவில் உள்ள நாடுகளில் பல்வேறு வகையான கலாச்சாரம், மொழி இருந்தாலும் சாப்பாட்டில் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பது அரிசி மட்டுமே. அதுவும் தெற்கு ஆசியாவில் சாப்பாட்டிற்கு அரிசி மட்டுமே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த அரிசி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக விளைவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான ரக அரிசிகளை விளைவிக்கிறது. அதோடு ஒவ்வொரு நாட்டிலும் அரிசியை சமைக்கும் விதமும் மாறுபடுகிறது. இந்த அரிசியை மட்டும்தான் மக்களால் மலிவு விலையில் வாங்கி சாப்பிட முடிகிறது. ஆனால் இப்போது ஜப்பானில் ஆடம்பர ரக அரிசி உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் காஸ்ட்லியான அரிசி
அதிநவீன தொழில் நுட்பம் மற்றும் அரிசி-பஃபிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய ரக அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கின்மேமாய் பிரீமியம் என அழைக்கப்படும் அரிசி தான் உலகில் மிகவும் ஆடம்பரமான விலையுயர்ந்த அரிசியாக பார்க்கப்படுகிறது.

அரிசி உற்பத்தியை மேம்படுத்த 2016ம் ஆண்டு கின்மேமாய் பிரீமியம் ரக அரிசி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே 840 கிராம் அரிசி ரூ.5490 க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போதே இந்த அரிசி அதிக விலையுள்ள அரிசி என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இப்போது அதே ரக அரிசி மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆகும்.
பொதுவாக அரிசியை சமைக்கும்போது, அதை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவது வழக்கம். அரிசியில் இருக்கும் அதிகப்படியான அழுக்குகளை அகற்ற சிலர் அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைப்பதுண்டு. ஆனால் ஜப்பானிய கின்மேமாய் பிரீமியம் அரிசி ஒரு மேம்படுத்தப்பட்ட மில் மூலம் தவிடு நீக்கப்படுகிறது. எனவே இந்த அரிசியை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டிய அவசியமில்லை.
நோயை எதிர்த்து போராடும்
வழக்கமான அரிசியில் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்கக்கூடிய lipopolysaccharides புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கின்மேமாய் ரகத்தில் 6 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதோடு கின்மேமாய் ரக அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
இந்த வகை அரிசியை உற்பத்தி செய்ய பிகாமாரு மற்றும் கோஷிஹிகாரி ரக நெல் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானிய கின்மேமாய் பிரீமியம் அரிசி உற்பத்தியாளர்கள் ஜப்பானின் கோஷிஹிகாரி பகுதியில் விளையும் நெல்லை விவசாயிகளிடமிருந்து எட்டு மடங்கு அதிக விலையில் வாங்குகின்றனர். அதை பிரத்யேகமான முறையில் சத்து குறையாமல் மில்லில் அரைத்து பாலிஷ் செய்கின்றனர். . இந்தப் பகுதி மலைகளால் சூழப்பட்டு இருக்கிறது. எனவே, இங்குள்ள வெப்பநிலை நெல் உற்பத்திக்கு ஏற்றதாக உள்ளது. ஜப்பானில் 300 வகையான அரிசி ரகங்கள் இருக்கிறது.
ஜப்பானின் டோயோ ரைஸ் கார்ப்பரேஷின் தலைவராக இருந்த 91 வயதான தலைவரான கெய்ஜி சாய்கா கின்மேமாய் பிரீமிய அரிசி உற்பத்திக்கு காரணமாக இருந்தவர். 2016ம் இவர் தான் இந்த அரிசியை அறிமுகம் செய்தார்.