அல் பலா பல்கலை. வேந்தருக்கு டெல்லி போலீஸார் சம்மன்

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹரி​யா​னாவைச் சேர்ந்த அல் பலா பல்​கலைக்கழகம் மீது மோசடி மற்​றும் போலி ஆவணங்​கள் தயாரித்​தல் தொடர்​பாக குற்​றப்​பிரிவு போலீ​ஸார் ஏற்​கெனவே இரண்டு எப்​ஐஆர்​களை பதிவு செய்​துள்​ளனர்.

இந்த நிலை​யில், தீவிர​வாத தாக்​குதலில் ஈடு​பட முயன்ற மருத்​து​வர்​களுக்​கும், அப்​பல்​கலைக்​கழகத்​துக்​கும் இடையே​யான தொடர்பு குறித்து விசா​ரிக்​கப்பட வேண்​டி​யுள்​ளது. இதன் காரண​மாக டெல்லி போலீ​ஸார் வேந்தர் ஜவாத் அகமதுக்கு சம்​மன் அனுப்​பி​யுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வேந்தரின் தம்பி கைது: இந்நிலையில் 25 ஆண்​டு​களுக்கு முன்பாக நடை​பெற்ற மோசடி தொடர்​பான வழக்​கில் அல் பலா பல்​கலைக்​கழக வேந்​தரின் தம்பி ஹமூத் அகமது சித்​திக்கை ஹைதராபாத்​தில் கைது செய்​துள்ள​தாக மத்​திய பிரதேச போலீ​ஸார் நேற்று தெரி​வித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.