Kagiso Rabada Ruled Out From India – South Africa 2nd Test: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றது.
Add Zee News as a Preferred Source
India – South Africa 2nd Test: கெளகாத்தியில் இரண்டாவது போட்டி
அதனைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22 ஆம் தேதி அசாமின் கௌகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால்தான் தொடரை சமனாக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்திய அணி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
India – South Africa 2nd Test: காகிஸோ ரபாடா விலகல்
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா மீண்டும் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் இந்தியாவில் அணியுடன் இணைந்திருந்தாலும், உடல் நலக்குறைவு மற்றும் சோர்வு காரணமாக மருத்துவர்கள் அவருக்கு ஓய்வுக்காலம் அறிவித்துள்ளனர் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
India – South Africa 2nd Test: மாற்று வீரராக லுங்கி இங்கிடி
அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிடி அணிக்குள் சேர்க்கப்பட்டிருப்பதால் தென்னாப்பிரிக்க பந்துவீச்சுத் தொடரில் புதிய ஆற்றல் சேரும் என்றும், இவரது வேகம் மற்றும் லைன்-லெங்க்த்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய துடுப்பாட்ட அணிக்கு சவாலாக அமையும் என்றும் வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
மாறாக, இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தங்களது துல்லியத்துடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் பொட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்பதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
About the Author
R Balaji