
புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நிறுவனர் லாலு மகள் ரோஹிணி ஆச்சார்யா, குடும்பம், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு சகோதரன் தேஜஸ்வியின் நெருங்கிய நண்பர்கள் ரமீஸ் நிமத் மற்றும் சஞ்சய் யாதவ்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டி உள்ளார். ஆர்ஜேடி.யில் அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரமீஸ், சஞ்சய் ஆகியோர் யார்?
கடந்த 2 ஆண்டுகளாக தேஜஸ்வியின் அரசியல் குழுவில் ரமீஸ் நிமத், சஞ்சய் யாதவ் ஆகியோர் முக்கியமானவர்களாக உள்ளனர். உ.பி. பல்ராம்பூரைச் சேர்ந்தவர் ரமீஸ். இவரது தந்தை நியாமத்துல்லா கான். பல்ராம்பூர் தொகுதி சமாஜ்வாதி முன்னாள் எம்.பி. ரிஸ்வான் ஜாகீரின் மருமகன் ரமீஸ். ரிஸ்வான் மூலம் அரசியல் அனுபவம் பெற்ற ரமீஸுக்கு தேஜஸ்வி நட்பு கிடைத்தது. தேஜஸ்வி விளையாடி வந்த கிரிக்கெட் கிளப்பில் ரமீஸும் இருந்தார். அதனால் இருவருக்குள் நட்பு உருவானது. அதன்பின் அரசியல் களத்தை ஏற்படுத்தி கொண்டார் ரமீஸ்.