ராவல்பிண்டி,
பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
இதில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் 2வது ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ராவல்பிண்டியில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது.
Related Tags :