
பிஹாரின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான் என்று மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இமாலய வெற்றிக்கு எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் ஆணையம்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே?