ஷ்ரேயாஸ் ஐயர் IPL தொடரில் விளையாடுவதில் சிக்கல்… எப்போது குணமடைவார்?

Shreyas Iyer Injury Latest Updates: கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக அனைவராலும் பெரிதும் கவரப்பட்ட கேப்டன் என்றால் அது ஷ்ரேயாஸ் ஐயர்தான். 2018ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டுவரை டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்து 2022, 2024 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கினார். கடந்த 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

Add Zee News as a Preferred Source

Shreyas Iyer Injury: கேப்டன்ஸியில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்

2024 சீசனில் கேகேஆர் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்தார். அடுத்து 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். பஞ்சாப் அணி இதற்கு ஒரே ஒருமுறைதான் பிளே ஆப் சுற்றுக்கே சென்றது, அதுவும் 2014ஆம் ஆண்டில்தான். அதற்கு பின் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல்முறையாக பிளே ஆப் வந்து, இறுதிப்போட்டிக்கும் வந்தது. 

கடந்தாண்டு சையத் முஷ்டாக் அலி டிரோபி தொடரையும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் மும்பை அணி வென்றது. இப்படி டி20ஐ கேப்டன்ஸியில் மிரட்டி வந்த ஷ்ரேயாஸ் ஐயர், சர்வதேச டி20ஐ போட்டியில் கடைசியாக 2023ஆம் ஆண்டில் விளையாடினார். டெஸ்ட் போட்டியிலும் கடைசியாக 2024ஆம் ஆண்டு ஜனவரியில் விளையாடினார். தற்போதைய சூழலில் அவருக்கு ஓடிஐ அணியில் மட்டுமே நிரந்தர இடம் இருக்கிறது.

Shreyas Iyer Injury: ஒருநாள் தொடர்களில் விளையாட வாய்ப்பில்லை

இந்தச் சூழலில், சிட்னியில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிஐ போட்டியில் அலெக்ஸ் கேரியின் கேட்ச்சை பிடித்தபோது, நெஞ்சு எலும்பில் காயம் ஏற்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பின் நீண்ட ஓய்வில் இருக்கிறார். இவர் ஓடிஐ தொடரில் மட்டுமே விளையாடுகிறார் என்பதாலும், ஓய்வு தேவைப்படுவதாலும் டிசம்பர், ஜனவரியில் நடக்கும் முறையே தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஓடிஐ தொடரில் இவர் விளையாட வாய்ப்பில்லை என்பது உறுதி. 

Shreyas Iyer Injury: ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுப்பாரா?

தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பையிலும் பங்கேற்க மாட்டார் என்பதால் 5 மாத தொடர் ஓய்வுக்கு பின் ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுப்பார் என கூறப்பட்டது. ரசிகர்களும் அவரது வருகைக்கு ஆவலோடு காத்திருந்தனர். கடந்தாண்டு ஜஸ்ட் மிஸ்ஸில் கோப்பை மிஸ்ஸான நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டு வந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் 18 ஆண்டு கால கோப்பை தாகத்தை தீர்த்து வைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்தச் சூழலில், ஷ்ரேயாஸ் ஐயர் ரசிகர்களுக்கும், பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்களுக்கும் கவலையளிக்க கூடிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அவர் ஐபிஎல் 2026 தொடரிலும் ஆரம்பக் கட்ட போட்டிகளை தரவிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Shreyas Iyer Injury: மருத்துவர்களின் அட்வைஸ் என்ன?

Dainik Jagran என்ற ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி, ஷ்ரேயாஸ் ஐயருக்கு சமீபத்தில் Ultrasonography எனும் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளை மருத்துவர் டின்ஷா பர்திவாலா என்பவர் பகுப்பாய்வு செய்துள்ளார். ஸ்கேன் முடிவுகளில் ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளது உறுதியாகியிருக்கிறது. ஆனாலும் வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் அவர் ஈடுபடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவரது வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த உடற்பயிற்சியையும் செய்ய அவருக்கு அனுமதி இல்லை என புரிந்துகொள்ளலாம். 

Shreyas Iyer Injury: சர்வதேச போட்டிக்கு எப்போது திரும்புவார்?

ஓரிரு மாதங்களில் அவர் இதேபோன்று மற்றொரு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். அதன் பிறகு அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் திறன் மேம்பாட்டு மையத்தில் எப்போது இணைவார் என்பது முடிவு செய்யப்படும். அங்கு அவர் தனது உடற்தகுதியை மேம்படுத்த பயிற்றுவிக்கப்படுவார். இதன்மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அடுத்தாண்டு ஜூன் மாதத்தில்தான் திரும்புவார் என கூறப்படுகிறது. ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. ஜூன் மாதம்தான் சர்வதேச போட்டிக்கு வருவார் என்றாலும், ஏப்ரல் மாதத்தில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மருத்துவமனையில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்… முதல்முறையாக போட்ட உருக்கமான பதிவு…!

மேலும் படிக்க | ஜாஷ் இங்கிலிஸை கழட்டிவிட்டது ஏன்? ஷாக்கான ரசிகர்கள்… பாண்டிங் சொன்ன காரணம்

மேலும் படிக்க | T20 World Cup 2026: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போது? – அட்டவணை எப்போது ரிலீஸ்?

  

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.