Sanchar Saathi App: மொபைல் பயனர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. மொபைல் கைபேசி உற்பத்தியாளர்களும் இறக்குமதியாளர்களும், அனைத்து புதிய சாதனங்களிலும் மோசடி அறிக்கையிடல் செயலியான ‘சஞ்சார் சாதி’ 90 நாட்களுக்குள் நிறுவப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source
சஞ்சார் சாதி செயலி: நவம்பர் 28 தேதி வெளிவந்த உத்தரவு
கடந்த மாதம் நவம்பர் 28 தேதியிட்ட உத்தரவில், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் இந்த செயலி இருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் கைபேசிகளின் அனைத்து உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், இந்த உத்தரவுகள் வெளியிடப்பட்ட 90 நாட்களுக்குள், தொலைத்தொடர்புத் துறையால் குறிப்பிடப்பட்டுள்ள சஞ்சார் சாதி மொபைல் செயலி, இந்தியாவில் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் கைபேசிகளிலும் முன்பே நிறுவப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அறிவுறுத்துகிறது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ள அனைத்து சாதனங்களுக்கும், மொபைல் கைபேசி உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மென்பொருள் மூலம் செயலியை ‘இன்ஸ்டால்’ செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் கைபேசிகளின் அனைத்து உற்பத்தியாளர்களும் இறக்குமதியாளர்களும் இந்த உத்தரவுகள் வெளியிடப்பட்ட 120 நாட்களுக்குள் தொலைத்தொடர்புத் துறைக்கு இணக்க அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு கூறுகிறது.
சஞ்சார் சாதி செயலி என்றால் என்ன?
சஞ்சார் சாதி செயலி என்பது ஒரு சைபர் பாதுகாப்பு கருவியாகும். 2023 ஆம் ஆண்டு ஒரு வலை போர்ட்டலாக தொடங்கப்பட்ட இந்த செயலி, குடிமக்களின் மொபைல் எண்கள் மற்றும் சாதனங்கள் தொடர்பான பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இது ஜனவரி 2025 இல் மொபைல் செயலியாக விரிவுபடுத்தப்பட்டது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த செயலி முற்றிலும் இலவசமானது.
Sanchar Saathi App
இந்த செயலி, அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு பாதுகாப்பு அமைப்புடன் (CEIR) நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. CEIR என்பது நாட்டில் உள்ள அனைத்து மொபைல் போன்களின் IMEI எண்ணையும் சேமிக்கும் மைய தரவுத்தளமாகும். சஞ்சார் சாதி செயலி என்பது தொலைபேசி பாதுகாப்பு, அடையாள பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மோசடிக்கு எதிரான பாதுகாப்பிற்கான எளிய மற்றும் பயனுள்ள கருவியாகும். இது உங்கள் தொலைபேசியைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது, உங்கள் அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கிறது, தேவைப்படும்போது உடனடி அரசாங்க உதவியையும் வழங்குகிறது.
சஞ்சார் சாதி செயலி எவ்வாறு செயல்படுகிறது?
– இந்த செயலி, பயனர்கள் சர்வதேச மொபைல் உபகரண அடையாள எண்ணின் (IMEI) சந்தேகத்திற்குரிய தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் புகாரளிக்கவும், மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் IMEI இன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும் உதவுகிறது.
– ஒருவரது மொபைல் திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ, இந்த செயலி உடனடியாக தொலைபேசியை பிளாக் செய்ய உதவுகிறது.
– இது திருடப்பட்ட அல்லது தொலைந்து போன தொலைபேசியைக் கண்காணிக்கவும் உதவுகிறது.
– பயனரது பெயரில் எத்தனை சிம் கார்டுகள் செயலில் உள்ளன என்பதையும் இது காட்டுகிறது.
– ஒரு பயனருக்கு மோசடி அழைப்பு வந்தால், இந்த செயலியில் இருந்து அந்த எண்ணைப் பற்றி நேரடியாகப் புகாரளிக்கலாம்.
– எந்தவொரு மொபைல் போனின் IMEI எண்ணையும் செயலியில் உள்ளிட்டு, அந்த போன் உண்மையானதா, திருடப்பட்டதா அல்லது கருப்புப் பட்டியலில் உள்ளதா என்பதை பயனர்கள் செக் செய்யலாம்.
இப்படி செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை
மொபைல் போனின் 15 இலக்க IMEI எண் உட்பட தொலைத்தொடர்பு அடையாளத் தகவலை சேதப்படுத்துவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். இதற்கு தொலைத்தொடர்பு சட்டம் 2023 இன் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ₹50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
Sanchar Saathi App: இந்த செயலியின் நோக்கம் என்ன?
– சைபர் மோசடி மற்றும் தொலைத்தொடர்பு வகைகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது
– மொபைல் திருட்டு மற்றும் கடத்தலைத் தடுப்பது
– குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிப்பது
இந்த நோக்கங்களுக்காக அரசாங்கம் Sanchar Saathi செயலியை கட்டாயமாக்குகிறது.
நிறுவனங்கள் இதைச் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
நிறுவனங்கள் விதிகளைப் பின்பற்றத் தவறினால், தொலைத்தொடர்புச் சட்டம் 2023, தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் 2024 மற்றும் பிற பொருத்தமான சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
About the Author

Sripriya Sambathkumar
Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs.
She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.
…Read More