மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரில் இருக்கும் மகாகால் கோயில் மிகவும் பிரபலமான கோயில்.

சமீபத்தில் உஜ்ஜைன் நகரில் சர்வதேச நேரக் கணக்கீட்டு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”இந்தியாவில் தற்போது நேரத்தைக் கணக்கிட இருக்கும் கிரீன்விச் மீன் டைம் முறைக்குப் பதில் மகாகால் ஸ்டாண்டர்ட் டைம் முறைக்கு மாற்றவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.