சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.. யாருக்கெல்லாம் இடம்..?

மும்பை, ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 5 கோப்பைகளை வென்றுள்ளது. இந்த சூழலில் அந்த அணியில் இதுவரை விளையாடிய சிறந்த வீரர்களை கொண்டு ஆல் டைம் பெஸ்ட் சிஎஸ்கே அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை. அதுபோக பதிரனா, கான்வே, பிராவோ போன்ற நட்சத்திர வீரர்களையும் அவர் தேர்வு செய்யவில்லை. சுரேஷ் ரெய்னா தேர்வு … Read more

ஜப்பானில் புல்லெட் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி

டோக்கியோ, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.இதையடுத்து இந்தியா-ஜப்பான் இடையே தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, போக்குவரத்து, பாதுகாப்பு துறை உள்பட பல்வேறு துறைகளில் 13 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.இதன் தொடர்ச்சியாக ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நேற்று … Read more

7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சமஸ்கிருத ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்த 36 வயது சமஸ்கிருத ஆசிரியர் மீது, அதே பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் மாணவிகள் தங்கள் புகாரை தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் இது குறித்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட சமஸ்கிருத ஆசிரியர் பள்ளியில் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை … Read more

தமிழக அணியிலிருந்து விலகியது ஏன்..? விஜய் சங்கர் விளக்கம்

சென்னை, ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக விளையாடி வந்த முன்னணி ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர் எதிர்வரும் சீசனில் திரிபுரா அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். அதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற்றுள்ளார். தமிழக அணிக்காக விளையாடிய கால கட்டங்களில்தான் அவர் இந்திய அணிக்கு விளையாட தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தமிழக அணியிலிருந்து விலகியது ஏன்? என்பது குறித்து விஜய் சங்கர் தற்போது விளக்கமளித்துள்ளார். அதில், “சில … Read more

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்- பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி

இஸ்லமாபாத், பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா எடுத்த இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான், இந்தியாவில் எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்க முற்பட்டது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய செயலை இந்தியா தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்தது. மூன்று நாட்களுக்கும் மேலாக இருநாடுகளுக்கும் மேலாக நீடித்த மோதல் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதையடுத்து முடிவுக்கு வந்தது. சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பாகிஸ்தானுக்கு … Read more

எந்த நாட்டையும் இந்தியா எதிரியாக கருதுவது இல்லை: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது: இந்தியா எந்த நாட்டையும் எதிரியாக கருதுவது இல்லை. எங்களுக்கு மக்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் நலன்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பரோ, எதிரியோ இல்லை. நிரந்தர நலன் மட்டுமே உள்ளது. உலகம் புதிய சவால்களுடன் வெகு வேகமாக மாறி வருகிறது. சுயசார்பு என்பது விருப்பமல்ல, தேவையானதாக மாறிவிட்டது … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தல்

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), கேமரூன் நோரி (இங்கிலாந்து) உடன் மோதினார். இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் அடுத்த 2 செட்டுகளை ஜோகோவிச் கைப்பற்றி வெற்றி பெற்றார். ஜோகோவிச் இந்த ஆட்டத்தில் 6-4, 6-7, 6-2 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி … Read more

சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பீஜிங், ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக அந்நாட்டுக்கு அவர் நேற்று சென்றார். இதன்பின்னர் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றினார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை சந்தித்து பேசினார். ஜப்பானில் 16 மாகாண கவர்னர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து விட்டு சீனாவுக்கு புறப்பட்டார். சீனாவின் தியான்ஜின் நகரில் … Read more

வேறு சாதி ஆணுடன் காதல்… மகளின் கழுத்தை நெரித்துக் கொன்று வாயில் விஷத்தை ஊற்றிய தந்தை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி பகுதியில் உள்ள மேலகுண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். கடந்த வியாழக்கிழமை சங்கரின் 18 வயது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. இதையடுத்து சங்கரின் குடும்பத்தினர் அந்த பெண்ணுக்கு இறுதிச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில், இது குறித்து மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கரின் வீட்டிற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான … Read more

வம்பிழுத்த திக்வேஷ் ரதி… சிக்சர் விளாசி அவரது ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்த நிதிஷ் ராணா..

புதுடெல்லி, டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் மேற்கு டெல்லி லயன்ஸ் – தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கு டெல்லி லயன்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தெற்கு டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேஜஸ்வி தாஹியா 60 ரன்கள் அடித்தார். பின்னர் … Read more