மக்களவையில் மசோதா நகல்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி

புதுடெல்லி, புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. புதிய மசோதாவின்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த … Read more

ஐ.பி.எல்.2026: ஏலத்தில் 9 பேர்.. சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள மொத்த வீரர்கள் எத்தனை..?

சென்னை, 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 10 அணிகளின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியினரும் தங்களிடம் இருந்த கையிருப்பு தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட வீரரை குறி வைத்து பல்வேறு வியூகங்களுடன் வந்திருந்தனர். ஏலத்தை மும்பைச் சேர்ந்த … Read more

இந்தியா-ஓமன் இடையேயான நட்பு புதிய உயரங்களை தொடும்- பிரதமர் மோடி பேச்சு

மஸ்கட், பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கான பயணத்தை கடந்த 15-ந்தேதி தொடங்கினார். முதலில் ஜோர்டானுக்கு சென்று இருதரப்பு பேச்சுவார்த்தை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் எத்தியோப்பியாவுக்கு சென்றார். எத்தியோப்பிய பயணத்தை முடித்து, பிரதமர் மோடி இறுதிக்கட்டமாக நேற்று மாலை ஓமனுக்கு சென்றடைந்தார். ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை ஓமனின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் சையத் … Read more

தாய், தந்தையை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன் – உ.பி.யில் பயங்கரம்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜபராபாத் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் ஷியாம் பகதூர்(வயது 62). இவரது மனைவி பபிதா(வயது 60). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மகன் அம்பேஷ் ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனை அவரது பெற்றோர் ஏற்காததால், குடும்பத்திற்குள் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி அம்பேஷ், தனது சகோதரிகளில் ஒருவரான … Read more

ஐ.பி.எல். தொடருடன் போட்டி போடும் பாகிஸ்தான் சூப்பர் லீக்

சென்னை, இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போன்று பல நாடுகளில் உள்ளூர் டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் 11-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச்.26-ம் தேதி முதல் மே.3-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 19-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற … Read more

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை – அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக … Read more

பனிமூட்ட காலங்களில் கிரிக்கெட் போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்தலாம் – சசிதரூர் யோசனை

திருவனந்தபுரம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையே, நேற்று லக்னோவில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி நடைபெற இருந்தது. ஆனால், போதிய வெளிச்சமின்மை மற்றும் அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக அந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக டி20 போட்டி ரத்துசெய்யப்பட்ட நிலையில், வட மாநிலங்களில் … Read more

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

கராச்சி, 16-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பர்ஹான் யூசுப் தலைமையிலான அந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் … Read more

செல்போனில் மட்டுமில்லை..இனி டிவியிலும் இன்ஸ்டா ரீல்ஸ்.. மெட்டா கொடுத்த அப்டேட்

இன்ஸ்டகிராம் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலியாக உள்ளது. இந்தியாவில் மட்டும் இன்ஸ்டகிராம் செயலியை சுமார் 48 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். இன்ஸ்டகிராம் செயலியில் துவக்கத்தில் புகைப்படம் மட்டுமே அப்டேட் செய்ய முடியும் என்ற நிலை இருந்த நிலையில், குறுகிய வீடியோக்களை அப்லோடு செய்து வசதியும் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் டிக்டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டா ரீல்ஸ் நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் இப்போதைய 2 கே கிட்ஸ்கல் குனிந்த தலை … Read more

‘இஸ்லாமியர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்’ – ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் கருத்து

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் சாண்ட் கபீர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசாபலே கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;- “இஸ்லாமியர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்வதால் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு என்ன தீங்கு வந்துவிடப் போகிறது? அவர்கள் மசூதிக்கு செல்வதை யாரும் தடுக்கப்போவதில்லை. நமது இந்து மதம் உன்னதமானது. அது அனைவரையும் உள்ளடக்கியது. சூரிய நமஸ்காரம் என்பது யோகாசன முத்திரைகளை கொண்ட, விஞ்ஞானப்பூர்வமான மற்றும் … Read more