மெஸ்ஸிக்கு கைக்கடிகாரம் பரிசளித்த ஆனந்த் அம்பானி…விலை இத்தனை கோடியா ?

புதுடெல்லி, கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி, ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற பெயரில் 14 ஆண்டுக்கு பிறகு மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த 13-ந்தேதி இந்தியாவுக்கு வந்தார். முதலில் கொல்கத்தாவுக்கு சென்ற அவர் தனது 70 அடி உருவச்சிலையை திறந்து வைத்தார். ஆனால் அங்கு சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் வெறும் 15 நிமிடங்களில் வெளியேறியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஸ்டேடியத்தை சூறையாடினர். இதனால் குழப்பம் ஏற்பட்டாலும் அவரது … Read more

வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்

டாக்கா, வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் இந்திய விசா விண்ணப்ப மையம் செயல்பட்டு வருகிறது. இது டாக்கா நகரின் அனைத்து இந்திய விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையமாக செயல்படுகிறது. இந்த நிலையில், டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் மாற்று தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக … Read more

திருப்பதி கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்

திருப்பதி, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வெர்டிஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் ஸ்ரீதர் போடுபள்ளி ரூ.1.20 கோடி மதிப்புள்ள சில்வர் மேக்ஸ் அரை பிளேடுகளை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார். இந்த பிளேடுகள் வேண்டுதலின்படி ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மொட்டையடிக்க ஒரு வருடத்திற்கு போதுமானதாகும். பிளேடுகளை நன்கொடையாளர் திருமலையில் உள்ள அறங்காவலர் குழு தலைவரின் முகாம் அலுவலகத்தில் தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் பேசிய தலைவர் பக்தர்கள் தலைமுடி காணிக்கை பெற … Read more

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு கார் பரிசு

புதுடெல்லி, அண்மையில் முடிவடைந்த 13-வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. உலகக் கோப்பையை முதல்முறையாக உச்சி முகர்ந்த இந்திய அணியை பிரதமர், ஜனாதிபதி நேரில் பாராட்டி உற்சாகப்படுத்தினர். வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் பரிசு மழை கொட்டியது. அதேபோல், இந்திய அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் பரிசுகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், முதல்முறையாக மகளிர் … Read more

எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் – பிரதமர் மோடி

அடிஸ் அபாபா, பிரதமர் மோடியின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் எத்தியோப்பியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அந்நாட்டுக்கு சென்ற அவரை அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அவரை தன்னுடன் காரில் அழைத்து சென்றார். எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுடனான சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, “ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும், தகவல் தொடர்பு, பரிமாற்றம் … Read more

‘2 ஆயிரம் கி.மீ. ரெயில் பாதை ‘கவச்’ அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது' – மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி ரெயில் பாதுகாப்பு அமைப்பான ‘கவச்’(Kavach) குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “கவச் என்பது ஒரு சிக்கலான அமைப்பாகும். இதில் தண்டவாளங்கள் நெடுகிலும் ஆப்டிகல் பைபர் கேபிள் (OFC) பதிப்பது, தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவுவது உள்பட ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன. இந்திய ரெயில்வே இதுவரை 7,129 கி.மீ. தூரத்திற்கு ஆப்டிகல் பைபர் கேபிள்களை பதித்துள்ளது, 860 தொலைத்தொடர்பு … Read more

ஐபிஎல் ஏலம்: கொல்கத்தா அணிக்கு தேர்வான எம்.பி.யின் மகன்…யார் தெரியுமா ?

மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்ட ஐ.பி.எல். மினி ஏலத்தில் 29 வெளிநாட்டவர், 48 இந்தியர் என 77 வீரர்கள் மொத்தம் ரூ.215.45 கோடிக்கு விற்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த ஏலத்தில் பீகார் எம்.பி. பப்பு யாதவின் மகன் சர்தக் ரஞ்சனை கொல்கத்தா அணி ரூ.30 … Read more

எத்தியோப்பியா சுற்றுப்பயணம் நிறைவு: ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

அட்டிஸ் அபாபா, பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு, அந்நாட்டின் மன்னர் அப்துல்லா-II முன்னிலையில் நடைபெற்ற இந்தியா – ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றினார். மேலும் இந்தியா – ஜோர்டான் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜோர்டான் பயணத்தை முடித்துவிட்டு, பிரதமர் மோடி எத்தியோபியா சென்றடைந்தார். இந்த பயணத்தின்போது, இந்தியா-எத்தியோப்பியா இடையிலான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து எத்தியோபியா பிரதமர் … Read more

பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது; இந்தியாவின் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது – அமித்ஷா

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜோர்டான் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலியுடன் இந்தியா-எத்தியோப்பியா இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து எத்தியோப்பியாவின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ வழங்கப்பட்டது. இந்த கவுரவ விருதை பெறும் முதல் உலகத் … Read more

ஆஷஸ் டெஸ்ட்: அலெக்ஸ் கேரி சதம்….ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு

அடிலெய்டு, ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த், பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. … Read more