உத்தரப்பிரதேசத்தில் லாரி மோதியதில் இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

தியோரியா, உத்தரப்பிரதேசத்தில் நேற்று இரவு லாரி மோதி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரைவரை கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர். தசரா திருவிழாவிற்கு கோட்வாலி சந்திப்பில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த நிலையில், மொஹல்லா கருல்பர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி கோட்வாலி சந்திப்பு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து திரிஷா யாதவ் (வயது 3), சாக்‌ஷி (வயது 13) என்ற சிறுமிகள் மீது மோதியது. இதில் சிறுமிகள் … Read more

முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

குயின்ஸ்லாந்து, டி20 உலகக்கோப்பை தொடர் வரும்16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான வீரர்களை, போட்டியில் பங்குபெறும் நாடுகள் அறிவித்துள்ளதோடு, போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த பின ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய அணியில் பெரிதும் மாற்றம் இல்லாமல் இந்திய அணிக்கு … Read more

வட கொரியா ஏவுகணை சோதனை: ஜப்பான் பிரதமருடன் ஜோ பைடன் ஆலோசனை

வாஷிங்டன், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது. இதன்படி ஜப்பான் கடற்பகுதியில் மீது கடந்த 1 ஆம் தேதி (சனிக்கிழமை) 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழலில் நேற்று காலை மீண்டும் ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீசியுள்ளது. இது … Read more

தேசிய கட்சி தொடங்கும் சந்திரசேகர ராவ்; மதுப்பிரியர்களுக்கு மது, உயிர் கோழி இலவசமாக கொடுத்த டிஆர்எஸ் நிர்வாகி

ஐதராபாத், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரான இவர் தேசிய அரசியலில் கால் பதிக்கும் நோக்கில் தேசிய கட்சி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, பல்வேறு மாநில தலைவர்களை சந்தித்து பேசிய சந்திரசேகர ராவ் இன்று தனது புதிய தேசிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்திரசேகர ராவ் தேசியக்கட்சி தொடங்க உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கானாவின் வாராங்கல் … Read more

நாங்கள் அனைத்துத் துறைகளிலும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் – ரோகித் சர்மா

இந்தூர், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்து தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா … Read more

இந்தோனேசிய கால்பந்து மைதான வன்முறை விவகாரம் – கால்பந்து கிளப்பிற்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிப்பு

ஜகார்தா, இந்தோனேசியாவின் மலாங்க் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 174 பேர் உயிரிழந்ததாகவும், 180-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கால்பந்து கிளப்பின் அதிகாரிகள் 2 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இதே போல் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து என்னை வெளியேற்றும் முயற்சியை தடுத்தார் ராகுல் காந்தி – சசி தரூர்

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தோடு சசி தரூர் மற்றும் கார்கே தீவிர நடவடிக்கைகளில் … Read more

தேசிய விளையாட்டுப் போட்டி – 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்றார்

காந்திநகர், 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் சென்று அசத்தினார். பந்தய தூரமான 200 மீட்டரை சுமார் 23 வினாடிகளை கடந்து அர்ச்சனா சுசீந்திரன் வெற்றி பெற்றார். அசாமைச் சேர்ந்த முன்னனி வீராங்கனை ஹிமா தாஸை பின்னுக்கு தள்ளி அர்ச்சனா தங்கப்பதக்கத்தை … Read more

டுவிட்டர் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தைத் தொடர முன்வந்த எலான் மஸ்க்..!!

வாஷிங்டன், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காததால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டுவிட்டரின் ஒரு பங்கிற்கு … Read more

ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி மர்ம மரணம்: போலீசார் விசாரணை

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா (57). சிறைத்துறை டி.ஜி.பி. லோஹியா, 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார். இந்நிலையில், லோஹியா நேற்று வீட்டில் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரித்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், குடும்ப … Read more