தேசிய கட்சி தொடங்கும் சந்திரசேகர ராவ்; மதுப்பிரியர்களுக்கு மது, உயிர் கோழி இலவசமாக கொடுத்த டிஆர்எஸ் நிர்வாகி

ஐதராபாத்,

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரான இவர் தேசிய அரசியலில் கால் பதிக்கும் நோக்கில் தேசிய கட்சி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, பல்வேறு மாநில தலைவர்களை சந்தித்து பேசிய சந்திரசேகர ராவ் இன்று தனது புதிய தேசிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்திரசேகர ராவ் தேசியக்கட்சி தொடங்க உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தெலுங்கானாவின் வாராங்கல் பகுதியை சேர்ந்த தெலுங்கானா ராஷிடிரிய சமிதி நிர்வாகி ராஜனலா ஸ்ரீஹரி மதுப்பிரியர்களுக்கு மது மற்றும் உயிர் கோழியை இலவசமாக கொடுத்தார்.

சந்திரசேகர ராவ் தேசியக்கட்சி தொடங்க உள்ளதால் அதை கொண்டாடும் வகையிலும், ஆதரவு திரட்டும் வகையிலும் மதுப்பிரியர்களுக்கு மது மற்றும் உயிருடன் கோழி ஒன்றை இலவசமாக கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.