உங்களுடன் பேசுவதில் பெருமைப்படுகிறேன்: காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களை சந்தித்து பிரதமர் மோடி உரை..!

புதுடெல்லி, 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு 4 பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி அணிவகுத்து சென்றனர். 12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் 210 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர். இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி … Read more

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 2,144 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக … Read more

தலைநகர் டெல்லியில் மேலும் 2 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா உறுதி

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 82 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 9 … Read more

"ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தும்" – ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பரம போட்டியாளர்களான இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன. அதன் பிறகு சூப்பர்-4 சுற்றிலும் இவ்விரு அணிகளும் சந்திக்க உள்ளன. கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் இறுதிப்போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்த வேண்டி வரும். இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரை … Read more

நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள்.. இங்கிலாந்து மக்களுக்கு வந்த சோதனை

லண்டன், இங்கிலாந்தில் கோடைகாலத்தின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தென் மேற்கு, தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தின் ஒரு சில பகுதிகள் மற்றும் கிழக்கு இங்கிலாந்து முழுவதுமாக வறட்சி அறிவிக்கப்பட்டு உள்ளது. வறட்சி பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் நீத்தேக்கங்களில் வழக்கத்தை விடவும் நீரின் அளவு குறைந்து கானப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுகளின் நீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அதிகபட்சமாக நேற்று ஒருசில பகுதிகளில் 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திங்கட்கிழமை லண்டனை … Read more

பஞ்சாபில் 'ஒரே எம்.எல்.ஏ. ஒரே ஓய்வூதியம்' சட்ட மசோதா – மாநில கவர்னர் ஒப்புதல்

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, ‘ஒரே எம்.எல்.ஏ. ஒரே ஓய்வூதியம்’ என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவின் மூலம், ஒரு சட்டமன்ற உறுப்பினர் எத்தனை முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு ஒரே ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்க வழிவகை … Read more

வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க தடை : பிசிசிஐ அதிரடி

மும்பை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டி20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் முதலீடு செய்துள்ளன. தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த வகையில் ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே … Read more

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறப்பட்டதை மறைத்து அமெரிக்காவுக்கு இந்திய கப்பல்கள் கொண்டு செல்வது கவலையளிக்கிறது – அமெரிக்கா

புதுடெல்லி, ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறப்பட்டதை மறைத்து அமெரிக்காவுக்கு நகரங்களுக்கு இந்திய கப்பல்கள் கொண்டு செல்வது கவலையளிக்கிறது என இந்தியாவுக்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா தெரிவித்தார். ரஷியாவில் இருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெயிலிருந்து எரிபொருள் தயாரித்து அவற்றை நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களுக்கு கடல் வழியாக இந்தியா கொண்டு செல்வதாகவும், ரஷியா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி இந்தியா செயல்படுவதாக அமெரிக்கா … Read more

கவுரிபிதனூர் அருகே வரதட்சணை கொடுமையால்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை-கணவர் கைது

கோலார் தங்கவயல்: வரதட்சணை கொடுமை சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா டி.பாள்யா கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருக்கும், தொட்டபள்ளாப்பூர் தாலுகா சென்னபுரா கிராமத்தை சேர்ந்த அனிதா (வயது 24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது அனிதாவின் பெற்றோர் சுப்ரமணி குடும்பத்தார் வரதட்சனையாக கேட்ட பணம்-நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த நாள் முதல் சுப்ரமணி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். வேலைக்கு செல்லாததால் வரதட்சணையாக கொடுத்த நகை-பணத்தை அடகு வைத்து … Read more

இன்ஸ்டாகிராமில் தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார் டோனி

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக ‘இல்லம் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன்படி, இன்று முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு … Read more