டி20 தொடர்: வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்த வெஸ்ட் இண்டீஸ்

சட்டோகிராம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணிக்கு … Read more

கனடா: கொலை வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை – கோர்ட்டு உத்தரவு

ஒட்டாவா, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி, போலேவார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் 38 வயதான விஷால் வாலியா என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியபோது ஒரு வாகனத்திற்கு தீவைத்துவிட்டுச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கொலையாளிகளான இக்பால் காங்க்(24), டீன்ரே பாப்டிஸ்ட்(21) மற்றும் பல்ராஜ் பஸ்ரா(25) ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். … Read more

ஆதார், ஜி.எஸ்.டி., கிரெடிட் கார்டு நடைமுறையில் புதிய மாற்றங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது

புதுடெல்லி, நவம்பர் 1 தேதி(இன்று) முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களுக்கு பல முக்கியமான நிதி விதி மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. இதில் புதிய வங்கிக் காப்பாளர் விதிகள், ஆதார் புதுப்பித்தலில் எளிமை, எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டண மாற்றங்கள், என்.பி.எஸ்-இல் இருந்து யு.பி.எஸ்-க்கு மாற்றம் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு, மற்றும் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி பதிவு முறை ஆகியவை அடங்கும். புதிய வங்கிக் காப்பாளர் விதிகள்: நவம்பர் 1 தேதி முதல் … Read more

2வது டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்

ஹராரே, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 ஆட்டத்தில் 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 19.3 … Read more

காதலி கண்முன்பு இந்தியர் கொலை; காரில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்டதால் விபரீதம்

ஒட்டாவா, கனடா எட்மண்டனில் வசித்து வந்தவர் ஆர்வி சிங் சாகூ (வயது 55). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் சம்பவத்தன்று இரவு தனது காதலியுடன் ஒரு ஓட்ட லுக்கு சாப்பிட சென்றார்.நள்ளிரவு அவர்கள் இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தனர். அப்போது அவரது கார் மீது ஒருவர் சிறுநீர் கழித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ஆர்வி சிங் சாகூ அவரிடம் ஏன் என் காரில் சிறுநீர் கழிக்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் … Read more

பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்; இமாசல பிரதேச மந்திரி

பாட்னா, பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக அங்கு சென்ற இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-20 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகாரில் வளர்ச்சிக்கான அறிகுறியே இல்லை. பீகாரில் 64 சதவீத மக்கள், நாள் ஒன்றுக்கு 66 ரூபாயுடன் வாழ்ந்து வருவதாக வெளியான புள்ளிவிவரமே அதற்கு சாட்சி. நல்லது நடக்க மாற்றம் அவசியம். இமாசலபிரதேசத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டதால், ஓய்வூதிய … Read more

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

மும்பை, இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா ஹீலி – போப் லிட்ச்பீல்ட் களமிறங்கினர். இவர்களில் ஹீலி 5 ரன்களில் ஆட்டமிழந்து … Read more

அணு ஆயுத சோதனையில் இறங்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்

மாஸ்கோ, சோவியத் ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே 1990-களில் பனிப்போர் நிலவியது. இதனால் இருநாடுகளும் அணு ஆயுத சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து போரில் சோவியத் ரஷியா தோல்வி அடைந்ததை தொடர்ந்து அது ரஷியாவாக பிரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள ஐ.நா. அமைப்பால் தடைவிதிக்கப்பட்டது. இந்தநிலையில் உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. போரை … Read more

புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு

புதுச்சேரி, புதுவையில் மின்கட்டணம் திடீரென மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. விட்டு உபயோக கட்டணம் யூனிடுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:- மின் அளவு பழைய கட்டணம்- புதிய கட்டணம் (யூனிட்) 0-100 ரூ.2.70 – ரூ.2.90 101- 200 ரூ.4.00 ரூ.4.20 201-300 ரூ.6.00 ரூ.6.20 301-400 ரூ.7.50 ரூ.7.70 400க்கு மேல் ரூ.7.50 ரூ.7.90. என … Read more

என்னால் நம்ப முடியவில்லை.. இதுதான் முதல் முறையா..? ரோகித் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்

லண்டன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.). ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு ஒரு நாள் போட்டிகளில் முறையே 73 மற்றும் 121 ரன்கள் விளாசியதன் மூலம் 36 புள்ளிகள் கூடுதலாக சேகரித்த ரோகித் சர்மா மொத்தம் 781 புள்ளிகளுடன் இரு இடம் உயர்ந்து ‘நம்பர் 1’ அரியணையில் அமர்ந்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் … Read more