முதல்தர கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை

மும்பை, 33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெல்லி – ஆந்திரா அணிகள் மோதின. இதில் டெல்லி அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, பண்ட் விளையாடினர். முதலில் களமிறங்கிய ஆந்திரா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 … Read more

உலகம் நாளை அழிய போகிறது; அதனால்… கானா நாட்டு தீர்க்கதரிசியை தேடி ஓடும் மக்கள்

ஆக்ரா, உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் புது ஆடைகளை உடுத்தி, உற்சாகத்துடன் ஆலயங்களில் வழிபாடு நடத்துவார்கள். கிறிஸ்துமஸ் தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நட்சத்திரங்களை வீட்டின் முன் தொங்க விட்டும், கிறிஸ்துமஸ் மரம், குடில் அமைத்தும் வருகின்றனர். இந்நிலையில், கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா என்பவர் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக அறிவித்து கொண்டார். இவர் சாக்கு துணியில் செய்யப்பட்ட ஆடையை அணிந்து இருக்கிறார். அது கிழிந்து தொங்கும் … Read more

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து

புதுடெல்லி, உலகம் முழுவதும் நாளைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட கிறிஸ்தவ மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அதோடு புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;- “நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, … Read more

விஜய் ஹசாரே கோப்பை: கோலி அபார சதம்…டெல்லி வெற்றி

மும்பை, 33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெல்லி – ஆந்திரா அணிகள் மோதின. இதில் டெல்லி அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, பண்ட் விளையாடினர். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் … Read more

சிங்கப்பூர்: இந்திய வம்சாவளி மனித உரிமைகள் வழக்கறிஞர் ரவி காலமானார்

சிங்கப்பூர், சிங்கப்பூரை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ரவி மாடசாமி (வயது 56). இவர் சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். மேலும், மரண தண்டனைக்கு எதிராகவும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாகவும் சிங்கப்பூரில் பல்வேறு வழக்குகளுக்கு இவர் வாதாடியுள்ளார். மேலும், ரவி மாடசாமியின் மனித உரிமைகள் தொடர்பான செயல்பாடுகளை பாராட்டி சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் அவருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1969ம் ஆண்டு பிறந்த ரவி மாடசாமி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் … Read more

வெளிநாட்டவர்களுக்காக மதுக்கொள்கையை தளர்த்திய குஜராத் அரசு

காந்திநகர் குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் காந்திநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச நிதி சேவை மையமாகவும், இந்தியாவின் முதல் க்ரீன்பீல்டு ஸ்மார்ட் சிட்டியாகவும் கருதப்படும் டெக் சிட்டியில் மட்டும் கடந்த 2023-ம் ஆண்டு முதல் மது விற்பனையை மாநில அரசு அங்கீகரித்தது. அதன்படி, வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகள் அமைந்துள்ள டெக் சிட்டியில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரண்டுகள் மற்றும் கிளப்புகளில் அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட பகுதியில் … Read more

2வது டி20: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

விசாகப்பட்டினம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன் தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் … Read more

புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி… ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

கொழும்பு, இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயலில் சிக்கி 640 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவிக்கின்றது. புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், முன்வந்த அண்டை நாடான இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவியை இந்தியா வழங்குகிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். … Read more

மத்திய பிரதேசம்: 42 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்

போபால், பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடப்பாண்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்றன. இதேபோன்று, நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, மத்திய பிரதேசம், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய பிரதேசத்தில், நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர். … Read more

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக ஜெமிமா நியமனம்

புதுடெல்லி, 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி நவி மும்பை மற்றும் வதோதராவில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது. நவி மும்பையில் நடக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. … Read more