அபிஷேக் சர்மா ஆட்டம்: நியூசிலாந்து பயிற்சியாளர் கருத்து

சென்னை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன் சேர்த்து இந்திய அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அடுத்து களமிறங்கிய … Read more

மியான்மரில் தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கம்; மக்கள் அதிர்ச்சி

நைபிடா, இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 25-ந்தேதி 14 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன்படி, அன்று மாலை 4.13 மணியளவில், ரிக்டரில் 3.6 அளவிலான நிலநடுக்கமும், மாலை 4.27 மணியளவில், ரிக்டரில் 3.5 அளவிலான மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவானது. அன்றிரவு 9.52 மணியளவில், ரிக்டரில் 3.9 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதேபோன்று, கடந்த 24-ந்தேதி … Read more

அம்பேத்கர் பெயர் விடுபட்டது தற்செயலானது: மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன் விளக்கம்

மும்பை, மராட்டிய மாநில ஊரக வளர்ச்சி மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான கிரிஷ் மகாஜன், குடியரசு தின உரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டதால், வனத்துறை பெண் அதிகாரி மாதவி ஜாதவ் நிகழ்விடத்திலேயே குரல் எழுப்பினார். “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத இந்துத்துத்துவ தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்ட மந்திரி கிரிஷ் மகாஜன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி அனைவருக்கும் அதிகாரம் அளித்த அம்பேத்கர் பெயரை குறிப்பிடாதது திட்டமிட்ட தவிர்ப்பு. என்னை பணி … Read more

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணிக்கு எதிராக டெல்லி பந்துவீச்சு தேர்வு

காந்தி நகர், 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் குஜராத் மாநிலம் வதோதரா மைதானத்தில் இன்று நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் டெல்லி – குஜராத் அணிகள் மோதுகின்றன டெல்லி அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்திலும், குஜராத் அணி 4வது இடத்திலும் உள்ளன.இரு அணிகளுக்கும் அரையிறுதிக்கு முன்னேற இது முக்கிய போட்டியாகும். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற … Read more

ஐபோன், மேக் பயனர்கள் குரோமை பயன்படுத்த வேண்டாம் – ஆப்பிள் எச்சரிக்கை

உலக அளவில் செல்போன் , கணினி தயாரிப்பில் முதன்மை வகிக்கும் நிறுவனம் ஆப்பிள். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம் உலக அளவில் அதிக மதிப்புள்ள நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை அது தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதுகாப்பில் கடுமையான விதிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய குரோம், குரோம் வெர்ஷன்களால் … Read more

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து

ஸ்ரீநகர், காஷ்மீரில் கடந்த 23-ந் தேதி புதிதாக பனிப்பொழிவு தொடங்கியது. அதனால் 270 கி.மீ. நீளம் கொண்ட ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, பனியால் மூடியது. நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. நெடுஞ்சாலை மூடப்பட்டது. அதேபோல, விமான நிலையத்திலும் பனி நிரம்பியுள்ளது. இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகருக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. “ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நிலவும் மோசமான வானிலை மற்றும் தொடர் பனிப்பொழிவு … Read more

டி20 உலகக் கோப்பை – மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு

சென்னை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சாய் ஹோப் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி … Read more

ஹமாஸ் வசமிருந்த கடைசி பணயக்கைதியின் உடலும் மீட்பு: இஸ்ரேல் தகவல்

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், 1,200-க்கு மேற்பட்டோரை கொன்று குவித்ததுடன், 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பலத்த போர் மூண்டது. 2 ஆண்டுகளாக இந்த போர் நீடித்த நிலையில் தற்போது காசாவில் முதற்கட்ட போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கிடையே பல கட்டங்களாக பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதில் பலர் உயிருடனும், சிலரின் உடல்களும் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்பட்டு வந்தன. … Read more

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு

புதுடெல்லி, வங்கிகளில் 2 மற்றும் 4- வது சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ள நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று (செவ்வாய் கிழமை) திட்டமிட்டபடி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். … Read more

டி20 உலகக் கோப்பை – ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு

சென்னை, அடுத்த மாதம் 7ம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வங்கதேசம் விலகிய நிலையில், மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம் பிடித்துள்ளது. அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களால் இந்தியா பயணிக்க முடியாது என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் எனவும் வங்கதேசம் தெரிவித்தது. … Read more