விமான விபத்து நடந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பகவத் கீதை

காந்தி நகர், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் 1.39 மணியளவில் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு

லண்டன், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 212 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித், வெப்ஸ்டர் அரைசதம் அடித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 43 ரன்களுடன் ஊசலாடியது. கேப்டன் பவுமா (3 ரன்), டேவிட் பெடிங்ஹாம் (8 ரன்) களத்தில் … Read more

பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

பாரிஸ், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் சென்றார். அவர் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இதனை தொடர்ந்து இன்று அவர் பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நியல் பெரொட்டை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, … Read more

மருத்துவ அவசர நிலை… எண்ணெய் கப்பலில் தவித்த இந்தியரை விரைந்து சென்று காப்பாற்றிய கடற்படை

புதுடெல்லி: சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஈகிள் வெராக்ரூஸ் என்ற எண்ணெய் கப்பல் இன்று இந்திய பெருங்கடல் பகுதியில் வந்தபோது, அந்த கப்பலில் இருந்த ஒரு ஊழியருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவ அவசரநிலை குறித்த செய்தி இந்திய கடற்படைக்கு கிடைத்தது. இதையடுத்து கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ். கருடா கப்பலில் இருந்து இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நோயாளியை அழைத்து வருவதற்கு உதவி செய்வதற்காக ஐ.என்.எஸ். … Read more

மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் வேறு இடத்திற்கு மாற்றம்

வாஷிங்டன், மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், ஈரான் … Read more

அயர்லாந்து – வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 மழையால் ரத்து

டப்ளின் , வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரை முடித்து கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்தது. போட்டி நடைபெறும் பகுதியில் பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மழை … Read more

வெப்பத்தில் தகிக்கும் டெல்லி; சிவப்பு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

புதுடெல்லி, – தலைநகர் டெல்லி வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. வெயில் அதிகபட்சமாக 113 டிகிரி வரை சென்றிருக்கிறது. ஆனாலும் காற்றின் ஈரப்பதம் காரணமாக அது 125 டிகிரியை உணர வைக்கிறது. இரவில்கூட பகல் போன்ற வெப்ப சூழலே தென்படுகிறது. ஏ.சி. பயன்படுத்தினாலும் பெரிய அளவில் இதம் இல்லை. ஏ.சி. வசதி இல்லாத மக்களின் நிலைமை பரிதாபமாகவே தெரிகிறது. இந்த நிலையில் வெப்ப அலை காரணமாக டெல்லிக்கு நேற்று சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டது. இன்றும் (வெள்ளிக்கிழமை) எச்சரிக்கை … Read more

அயர்லாந்து – வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

டப்ளின் , வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரை முடித்து கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்தது. இந்த நிலையில், போட்டி நடைபெறும் பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் … Read more

இங்கிலாந்தில் பெண் பலாத்காரம்: தொடர் போராட்டத்தில் வன்முறை; 40 போலீசார் படுகாயம்

லண்டன், இங்கிலாந்தின் பாலிமெனா நகரில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வெளிநாட்டைச் சேர்ந்த 3 சிறுவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே புலம்பெயர் தொழிலாளர்களின் வீடு, அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட … Read more

நாளை அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் சென்றவர்களில் பயணி ஒருவரை தவிர மற்ற பயணிகள், ஊழியர்கள் என 241 பேரும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த பயணிகளில், குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர் ஆவார். அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கிறது. விமானம் விபத்து குறித்து பிரதமர் … Read more