மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான 'அன்புச்சோலை' திட்டம் – முதல்வர் திருச்சியில் நாளை தொடங்கிவைக்கிறார்

சென்னை: புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 10.11.2025 அன்று ரூ.767 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக முதல்வர் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக … Read more

இண்டியா கூட்டணியில் இருந்து விலகுகிறதா ஜேஎம்எம்? – பிஹார் முடிவுகளுக்காக காத்திருக்கும் ஹேமந்த் சோரண்!

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அக்கட்சி அதிருப்தியில் இருப்பதாகவும், இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் அக்கட்சி சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சி உள்ளது. இக்கட்சி தலைமையிலான கூட்டணி ஜார்க்கண்ட்டில் ஆட்சியில் உள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரண் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். பழங்குடி … Read more

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி, கழிவறை வசதி இல்லாததால் அவதி!

சென்னையில் உள்ள முக்கிய மான ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் உள்ளது. தாம்பரத் தில் 3-வது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை- தாம்பரம் வரை தினசரி 220-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும், தாம்பரம் ரயில் நிலை யம் வழியாக செங்கல்பட்டு, திருமால் பூர் உள்பட புறநகர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக் கப்படுகின்றன. இதுதவிர, எழும்பூரில் இருந்து மத்திய, தென் மாவட்டங் களுக்கு தினசரி … Read more

கேரளாவில் ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை: மந்திரவாதி உட்பட 3 பேர் கைது

கோட்டயம்: உடலில் புகுந்த ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை செய்த மந்திரவாதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவன் வீட்டார் பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டது என்று கூறி ஆவியை விரட்டுவதற்காக மந்திரவாதி சிவதாஸ் (54) என்பவரை அழைத்து வந்தனர். காலையில் வந்த மந்திரவாதி சிவதாஸ் பூஜையில் இறங்கியுள்ளார். மேலும் அந்தப் … Read more

தமிழ்ப்பற்றை பேசாத திமுக: நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு

பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதாவது: வந்தே மாதரம் என்கிற முழக்கம் முதல் முதலாக ஒலித்து 150 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த எழுச்சிமிகு வார்த்தைகளை ஒவ்வொரு மக்களுக்கும் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என வந்தே மாதரம் பாடலுக்கு தெலங்கானா மாநிலத்தில் மிகப்பெரிய விழா எடுத்துவிட்டனர். ஆனால் வ.உ.சி., கொடி காத்த குமரன் வாழ்ந்த, அவர்கள் முழங்கிய வந்தே மாதரம் பாடலுக்கு … Read more

கொலை, பலாத்கார, தீவிரவாத குற்றவாளிகள் பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கை

பெங்களூரு: பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள கொலை, பலாத்​கார, தீவிர​வாத குற்​ற​வாளி​கள் டிவி பார்த்​த​வாறு செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ ஆதா​ரங்​கள் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளன. பெங்​களூருவை அடுத்​துள்ள பரப்பன அக்​ரஹா​ரா​வில் கடந்த 1997ம் ஆண்டு 138 ஏக்​கர் பரப்​பள​வில் மத்​திய சிறை கட்​டப்​பட்​டது. சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட தமிழக முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா, அவரது தோழி சசிகலா ஆகியோ​ரும் இந்த சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்​தனர். அப்​போது சசிகலா சீருடை அணி​யாமல் ஷாப்​பிங் சென்று வரு​வது போன்ற வீடியோ​வும், டிவி, … Read more

சூரியக் கட்சி தலைமையிடம் ‘ஓவர்’ பாசம் | உள்குத்து உளவாளி

லீடர் பதவியில் அமர்த்தி ஒன்றரை வருடம் தான் ஆகிறது. ஆனாலும் டெல்லி தலைமைக்கு அவரைப் பற்றி ஏகப்பட்ட ‘பெட்டிஷன்கள்’ குவிகிறதாம். சூரியக் கட்சி தலைமையிடம் ‘ஓவரா’ பாசம் காட்டுகிறார் என்பது தான் அதில் பல பேரின் புகைச்சலாம். ‘ஸ்ட்ராங்கான’ கட்சித் தலைவர் கொலை வழக்கில் இவரையும் விசாரிக்கப் போகிறது ’மத்திய போலீஸ்’ என்றும் சிலர் கிலி அடிக்கிறார்களாம். இவரை லீடராக வைத்திருந்தால் சூரியக் கட்சி கூட்டணியை விட்டு நகர்த்தவே முடியாது என்று யோசிக்கும் ஜூனியர் எம்பி-க்கள் சிலர், … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச. 1-ல் தொடக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி டிசம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும். இந்த கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக, … Read more

நாளை நடப்பது யாருக்கும் தெரியாது – சரத்குமார் தத்துவம்

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் என்பது வாக்காளர்களை சரிபார்க்கும் வேலை. கள்ள ஓட்டுவது போடுவது தடுக்கப்படும் என்பதால் குறை கூறுகின்றனர். எந்த சீர்திருத்தமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாக்காளரை சரிபார்க்க ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று முறை வருவதாக கூறியுள்ளனர். உண்மையான வாக்காளராக இருந்தால், அந்த வீட்டுக்கு வரும்போது தகுந்த ஆவணங்களை காண்பித்து சீர்திருத்தம் செய்வதுதானே நல்லது. தேர்தலுக்கு முன்புதானே வாக்காளர் … Read more

மாணவர்களுக்கு துப்பாக்கி வழங்குகிறது ஆர்ஜேடி; மடிக்கணினி வழங்குகிறது என்டிஏ: பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம் 

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி சீதாமரி, பெத்​தியா நகரங்​களில் பிரதமர் மோடி நேற்று பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த 6-ம் தேதி நடை​பெற்ற பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் பெண்​கள், இளைஞர்​கள் பெரும் எண்​ணிக்​கை​யில் திரண்டு வந்து வாக்​களித்​தனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு (என்டிஏ) ஆதர​வாக அவர்​கள் வாக்​களித்து இருப்​ப​தாக பரவலாக பேசப்​படு​கிறது. இதன்​மூலம் காட்​டாட்சி (ஆர்​ஜேடி) நபர்​களுக்கு 65 வால்ட் மின் அதிர்ச்சி ஏற்​பட்​டிருக்​கிறது. ஆர்​ஜேடி தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் சிறு​வர்​கள் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றனர். … Read more