“தமிழகத்தில் கால்பதிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி!” – பிருந்தா காரத் கருத்து

திருநெல்வேலி: இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களை நீக்கும் ஆணையமாக செயல்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்தார். மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தமிழகத்தில் கால்பதிக்க முயல்கின்றன என்று அவர் கூறினார். திருநெல்வேலியில் பாரதியாரின் 104 -வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் பிருந்தா காரத், மாநில செயலர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் … Read more

இதுவரை குடியரசு துணைத் தலைவராக பெண் இல்லை: முஸ்லிம்களுக்கு 3 முறை வாய்ப்பு

புதுடெல்லி: நாடு சுந்​திரம் அடைந்த பிறகு 1952-ல் நாட்​டின் முதல் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் சோவி​யத் ஒன்​றி​யத்​தின் தூத​ராக இருந்த தமிழ​ரான சர்​வபள்ளி ராதாகிருஷ்ணன் போட்​டி​யின்றி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். 1957-ல் இரண்​டாவது முறை​யாக இப்​ப​தவிக்கு போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்ட அவர், 1962-ல் குடியரசுத் தலை​வர் பதவியை​யும் அடைந்​தார். 1962-ல் நடந்த குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் பிஹார் ஆளுநர் ஜாகிர் உசேன் காங்​கிரஸ் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டு வெற்றி பெற்றார். சர்​வபள்ளி ராதாகிருஷ்ணனை போலவே ஜாகிர் … Read more

ஜென் Z போராட்டம் எதிரொலி: நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்!

காத்மாண்டு: பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதனையடுத்து இந்த தடை உத்தரவை நேபாள அரசு வாபஸ் பெற்றுள்ளது. பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட பதிவு செய்​யப்​ப​டாத 26 சமூக வலை​தளங்​களை நேபாள அரசு முடக்​கி​யது. இதனால், கடந்த வெள்​ளிக்​கிழமையி​லிருந்து அவற்றை பயன்​படுத்த முடி​யாமல் இளைஞர்​கள் தவித்து வந்தனர் இதையடுத்து சமூக … Read more

‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

சென்னை: பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்ச்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நடைமுறை தமிழகத்தில் 2011-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன் பின்னர் தமிழகத்தில் டெட் தேர்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியர் பணி … Read more

நகர்ப்புற வளர்ச்சியில் புனே நகரம் முதலிடம்: மூன்றாவது இடத்தில் சென்னை

புதுடெல்லி: நகரங்​களில் கட்​டிடங்​கள் அதி​கரிக்​கும் அளவை செயற்​கைக்​கோள் படங்​களை கொண்டு கணக்​கிட்டு ‘ஸ்​கொயர் யார்ட்​ஸ்’ என்ற ரியல் எஸ்​டேட் இணை​யதளம் ஒன்று ‘சிட்​டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்​பில் ஆய்வு ஒன்றை நடத்​தி​யுள்​ளது. இதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: இந்​திய நகரங்​களில் மகா​ராஷ்டிரா மாநிலத்​தில் உள்ள புனே நகரம் கடந்த 30 ஆண்​டு​களில் மிகப் பெரிய வளர்ச்​சியை எட்​டி​யுள்​ளது. நகர்ப்​புற எல்லை பல திசைகளில் விரிவடைந்​து, தற்​போது நகர்ப்​புற வளர்ச்​சி​யில் நாட்​டில் முதல் இடத்தை பிடித்​துள்​ளது. இரண்​டாவது இடத்தை பெங்​களூரு … Read more

இலங்கை, வங்கதேசம் பாணியில் நேபாளம் ‘சிக்கியது’ இந்தியாவுக்கு பெரும் சவால்… ஏன்?

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளில் அடுத்தடுத்த ஏற்படும் மக்கள் போராட்டம் இந்தியாவுக்கு புவி அரசியலில் ஒரு புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச சதி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம். 3 ஆண்டுகள்… 3 நாடுகள்… – கடந்த 2022-ம் ஆண்டு, இலங்கையில் மிகப் பெரிய மக்கள் புரட்சி வெடித்தது. 1948-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்திக்க … Read more

ராமதாஸ் Vs அன்புமணி – யாருக்கு பாமக தொண்டர்களின் ஆதரவு அதிகம்?

அன்புமணி எதிர்பார்க்காத ஒன்று இன்று நடந்துவிட்டது. பாமகவின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட அன்புமணியை, அவரின் தந்தை ராமதாஸே கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். இனி பாட்டாளிகளின் ஆதரவு யாருக்கு அதிகம் என்ற கேள்வி எழுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில், குறிப்பாக வட தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம். 1991 தேர்தல் முதல் எந்தக் கூட்டணியில் இருந்தாலும், தனித்து நின்றாலும் பாமகவின் டிராக் ரெக்கார்டு மிக மிக முக்கியமானது. மாறி, மாறி கூட்டணி வைக்கிறார் என்ற விமர்சனங்கள் இருந்தாலும், அதிகளவில் எம்எல்ஏக்களை … Read more

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக அனில்குமார் பதவியேற்பு

திருமலை: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் நிர்​வாக அதி​காரி​யாக அனில்​கு​மார் சிங்​கால் நேற்று 2-வது முறை​யாக ஏழு​மலை​யான் கோயி​லில் பதவி பொறுப்​பேற்​றுக்​கொண்​டார். முன்​ன​தாக அவர் நேற்று அதி​காலை தனது குடும்​பத்​தா​ருடன் கோயிலுக்கு சென்று ஏழு​மலை​யானை வழிபட்​டார். அதன் பின்​னர் அனில் குமார் சிங்​கால் நிர்​வாக அதி​காரி​யாக பதவி பொறுப்​பேற்​றார். அவர் திரு​மலை அன்​னமைய்யா பவனில் அனைத்து தேவஸ்​தான உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை கூட்​டத்​தில் பங்​கேற்​றார். பின்னர் அவர் கூறும்போது, “2-வது முறை​யாக தற்​போது மீண்​டும் இந்த தேவஸ்​தானத்​தின் நிர்​வாக … Read more

ஜென்-Z போராட்டத்தால் பற்றி எரியும் நேபாளம்: பல இடங்களில் தீ வைப்பு – நிலவரம் என்ன?

காத்மாண்டு: நேபாளத்தில் ஜென்-Z தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அதிபர், பிரதமர், உள்துறை அமைச்சரின் மாளிகைகளுக்கு தீ வைக்கப்பட்டன. நாடாளுமன்றம், அரசு அலுவலக வளாகம், உச்ச நீதிமன்றத்தை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். 240 ஆண்டுகளாக மன்னராட்சி நடைபெற்று வந்த நேபாளத்தில், கடந்த 2008-ம் ஆண்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது. கடந்த 2024 ஜூலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி உடைந்து ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து சிபிஎன் (யுஎம்எல்), … Read more

தூய்மை பணியாளர்கள் கைது விவகாரம்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டபோது, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடிய வழக்கில், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்திற்கு வெளியில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 13-ஆம் தேதி நள்ளிரவில் … Read more