டெல்லி கார் குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்

புதுடெல்லி: டெல்லி கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதலுக்கு அம்​மோனி​யம் நைட்​ரேட் வெடிபொருள் பயன்​படுத்​தப்​பட்​டிருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து டெல்லி போலீ​ஸார் கூறிய​தாவது: பொது​வாக அம்​மோனி​யம் நைட்​ரேட் வேளாண் உரமாக பயன்​படுத்​தப்​படு​கிறது. மத்​திய அரசின் மானிய உதவி​யுடன் சந்​தை​யில் ஒரு கிலோ அம்​மோனி​யம் நைட்​ரேட் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. பெயின்ட், ஜெல் ஆகிய​வற்​றின் தயாரிப்​பிலும் அம்​மோனி​யம் நைட்​ரேட் பயன்​படுத்​தப்​படு​கிறது. உரம், ஆலை பயன்​பாடு காரண​மாக இது சந்​தை​யில் தாராள​மாக கிடைக்​கிறது. சுமார் 94% அம்​மோனி​யம் நைட்​ரேட் உடன் … Read more

டெல்லி குண்டுவெடிப்பு | அனைத்து கோணங்களிலும் விசாரணை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல் 

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அரு​கில் நேற்று முன்​தினம் மாலை​யில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்​பவம், நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இந்த சம்​பவத்​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்​தனர். இதுதொடர்​பாக ‘எக்​ஸ்’ தளத்​தில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வெளி​யிட்​டுள்ள பதி​வில், “டெல்லி குண்​டு​வெடிப்பு உயி​ரிழப்​பால் எனக்கு ஏற்​பட்ட வேதனையை வார்த்​தைகளால் விவரிக்க இயலாது. அன்​புக்​குரிய​வர்​களை இழந்​தவர்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரிவித்துக் கொள்கிறேன். குண்​டு​வெடிப்பு நடந்த இடத்தைப் … Read more

ரூ.5 லட்சம் ஊதியம் பெற்றும் தீவிரவாதியான மருத்துவர் ஆதில்

புதுடெல்லி: ​காஷ்மீர் புல்​வாமா மாவட்​டம் குல்​காமின் காஜிகுண்ட் பகு​தி​யைச் சேர்ந்​தவர் மருத்​து​வர் ஆதில் அகமது. இவர், உ.பி. சஹாரன்​பூரில் பிரபல தனி​யார் மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றி​னார். தீவிர​வாத சதி தொடர்​பான சந்​தேகத்​தின் பேரில், காஷ்மீர் போலீ​ஸார் கடந்த 6-ம் தேதி சஹாரன்​பூருக்கு வந்து ஆதிலை கைது செய்​தனர். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் காஷ்மீர் அனந்​த​நாக் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் 3 ஆண்​டு​கள் பட்​டமேற்​படிப்பு படித்​தது தெரிய வந்​தது. மருத்​து​வ​மனை​யில் காலி செய்​யாமல் வைத்​திருந்த ஆதில் லாக்​கரிலும் சோதனை … Read more

“பாஜகவுக்கு துணை போகும் அதிமுகவுக்கு இதுதான் இறுதித் தேர்தல்” – செந்தில் பாலாஜி பேச்சு

கோவை: “தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவுக்கு துணை போகும் அதிமுகவுக்கு இதுதான் இறுதித் தேர்தல்” என கோவையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம், கோவை சிவானந்தா காலனியில் இன்று (நவ.11) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, முன்னாள் அமைச்சரும், … Read more

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ வசம் ஒப்படைத்தது மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ வசம் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, சட்டவிரோத தடுப்புச் சட்டம் பிரிவு 16 மற்றும் 18, குண்டு வெடிப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டங்களின் கீழ் டெல்லி கோட்வாலி காவல் துறையினர் வழக்குப் பதிவு … Read more

“தமிழக தேர்தல் களத்தில் ஒரு தொண்டராக பணியாற்றுவேன்” – நிர்மலா சீதாரமன் பேச்சு

கோவை: “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிதியமைச்சராக அல்ல, கட்சி தொண்டராக பணியாற்றுவேன்” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது: ”தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நிதி அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தபடுகிறது. அந்த சங்கத்தின் தலைவர் … Read more

செங்கோட்டை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – டெல்லி அரசு

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே திங்கட்கிழமை மாலை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தார்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ளது டெல்லி யூனியன் பிரதேச அரசு. “டெல்லியில் அரங்கேறிய துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. இதில் தங்களது உறவுகளை பிரிந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை டெல்லி அரசு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் காயமடைந்தவர்கள் விரைந்து குணம்பெற வேண்டும். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு … Read more

‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ – பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானை நிலைகுலைய செய்யும் வகையில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு இஸ்லாமாபாத்தில் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. … Read more

“ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்” – நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் எம்எல்ஏ, வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது: “ஜிஎஸ்டி வரி மாற்றம் செய்யப்பட்டதால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. தமிழ்நாடு … Read more

“பிஹாரில் நிகழும் அற்புதங்கள்…” – வாக்குப்பதிவு உயர்வு குறித்து தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை

பாட்னா: பிஹார் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்தது குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பிஹாரில் அற்புதங்கள் நிகழ்வதாக நம்பிக்கை தெரிவித்தார். பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட வீடியோ பதிவில், “என் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது. என் பிஹார் உண்மையிலேயே அற்புதங்களை நிகழ்த்துகிறது. எல்லா இடங்களிலிருந்தும் அமோக வாக்குப்பதிவு பற்றிய தகவல்கள் வருகின்றன. … Read more