அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும்: மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இம்பால்: மணிப்​பூர் மக்​கள், அமைப்​பு​கள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்​டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதே​யி – குகி சமு​தா​யங்​களுக்கு இடையே மோதல் ஏற்​பட்​டது. இதன்​காரண​மாக மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்​தது. இதில் 258 பேர் உயி​ரிழந்​தனர். 1,108 பேர் காயமடைந்​தனர். 400 தேவால​யங்​கள், 132 இந்து கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. 60,000-க்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர். மணிப்​பூரில் சுமார் 2 ஆண்​டு​களுக்​கும் மேலாக வன்​முறை நீடித்தது. இந்த சூழலில் … Read more

உக்ரைனுடன் அமைதி பேச்சை நிறுத்தியதாக ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: உக்​ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடு​களின் தலை​வர்​களை​யும் தனித்​தனியே சந்​தித்து பேசி​னார். ஆனால் பேச்​சு​வார்த்​தை​யில் தீர்வு எட்​டப்​பட​வில்​லை. இதனிடையே ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யும் துருக்கி நாட்​டின் தலைநகர் இஸ்​தான்​புல்​லில் 3 சுற்​றுகளாக நடை​பெற்​றது. ஆனால் எந்த முடி​வும் எட்​டப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், உக்​ரைனுட​னான அமை​திப் பேச்சு நிறுத்​தப்​பட்​டுள்​ளது என்று ரஷ்​யா​வின் கிரெம்​ளின் மாளிகை நேற்று அறி​வித்​துள்​ளது. இதுகுறித்து ரஷ்ய அரசின் செய்​தித் தொடர்​பாளர் டிமிட்ரி பெஸ்​கோவ் நேற்று … Read more

இந்திய கம்யூ. மாநில செயலாளராக வீரபாண்டியன் போட்டியின்றி தேர்வு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரை மாநிலச் செயலாளர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவார். 2015-ல் மாநிலச் செயலாளராக இரா.முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகும் தொடர்ந்து 2 முறை மாநிலச் செயலாளராக அவரே தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் 9 ஆண்டுகள் பணியாற்றினார். இந்நிலையில், புதிய மாநிலச் செயலாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, … Read more

இந்தியா – பாக். கிரிக்கெட் போட்டிக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு: டெல்லியில் திரையிடும் கிளப்களுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அரசு அவமானப்படுத்துவதாக டெல்லி பிரிவுத் தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டினார். ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டி நாளை துபாயில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்தப் போட்டிக்கு எதிராக மகாராஷ்டிரா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று சிவசேனா (யுபிடி) … Read more

குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சார்லி கிர்க் கொலை குற்றவாளி கைது

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் ஆளும் குடியரசு கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சார்லி கிர்க், அதிபர் ட்ரம்​புக்கு மிக​வும் நெருக்​க​மாக இருந்​தார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்​தலில் அவர் மிகத் தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தார். இந்த சூழலில் கடந்த 10-ம் தேதி அமெரிக்​கா​வின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்​ளத்​தாக்கு பல்​கலைக்​கழக வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சார்லி கிர்க் பங்​கேற்​றார். அப்​போது மர்ம நபர் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் அவர் உயி​ரிழந்​தார். இதில் தொடர்​புடைய டெய்​லர் ராபின்​சன் (22), … Read more

“நான் எப்போதும் மக்கள் கடலோடு இருப்பதைப் பார்த்த எதிரிகள்…” – அரியலூரில் விஜய் பேச்சு

அரியலூர்: ‘பாஜக செய்வது துரோகம்; திமுக செய்வது நம்பிக்கை மோசடி’ என மத்திய மற்றும் மாநில அரசை அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது தவெக தலைவர் விஜய் சாடினார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் பிரச்சாரப் பயணத்தை திருச்சியில் சனிக்கிழமை காலை தொடங்கினார். திருச்சியில் மதியம் 3 மணி அளவில் விஜய் பேசினார். மைக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரது உரையை முறையாக கேட்க முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் தனது உரையை … Read more

‘இந்தியா vs பாக். ஆட்டத்தை பார்க்க வேண்டாம் என மனம் சொல்கிறது’ – ஹர்ஷ் கோயங்கா

மும்பை: ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் உடன் விளையாடுகிறது என்ற அறிவிப்பு வெளியானது முதல் இந்த ஆட்டத்தில் இந்தியா விளையாடக் கூடாது என்ற குரல் ஒலித்து வருகிறது. அதற்கான காரணமாக பஹல்காம் தாக்குதல் அமைந்துள்ளது. இந்த சூழலில் இப்போட்டி குறித்து ஆர்பிஜி குழும தலைவர் ஹர்ஷ் கோயங்கா. “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை பார்க்க வேண்டாம் என மனம் சொல்கிறது. அது முக்கியம் அல்ல என புத்தி சொல்கிறது. ஆட்டத்தை புறக்கணிக்க … Read more

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி உணவக மேலாளர் கொலை: மனைவி, மகன் கண் முன்னே பயங்கரம்

டல்லாஸ்: அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாநிலம் டல்​லாஸ் நகரில் உள்ள ஓர் உணவகத்​தில் மேலா​ள​ராக கர்​நாட​காவை சேர்ந்த சந்​திரமவுலி நாகமல்​லையா (50) என்​பவர் பணி​யாற்றி வந்​தார். இவர் தனது மனைவி நிஷா மற்​றும் 18 வயது மகன் கவுரவ் உடன் உணவகத்​திலேயே தங்​கி​யிருந்​தார். இந்​நிலை​யில் கடந்த புதன்​கிழமை காலை உணவகத்​தின் மற்​றொரு ஊழிய​ரான யோர்​டானிஸ் கோபோஸ் மார்​டினெஸ் (37) ஓர் அறையை சுத்​தம் செய்​த​போது அங்கு சென்ற நாகமல்​லையா பழுதடைந்த வாஷிங் மெஷினை பயன்​படுத்த வேண்​டாம் என கூறி​யுள்​ளார். … Read more

“விஜய்க்கு கூட்டம் கூடுவது மாற்றத்தை விரும்பும் மக்களின் உணர்வுகளை காட்டுகிறது” – கிருஷ்ணசாமி

திருநெல்வேலி: “ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்காளர்களது உணர்வின் வடிகாலாய் விஜய் இருக்கிறார். அதனாலேயே பெண்களும் இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள். விஜய் மட்டுமே ஆட்சி அமைத்து விட முடியாது. நல்ல நண்பர்களை சேர்த்துக் கொண்டால் அவரது தேர்தல் வியூகம் சரியாக இருக்கும்” என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறிய: “தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்குப்பின் 2 கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. … Read more

“நேபாளத்தின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு சுசீலா கார்கி வழிவகுப்பார்” – மோடி நம்பிக்கை

இம்பால்: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுசீலா கார்கி, நாட்டின் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்புக்கு வழி வகுப்பார் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாள இளைஞர்கள் சாலைகளை சுத்தம் செய்து வண்ணம் தீட்டும் பணிகளில் ஈடுபட்டதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுசீலா கார்கிக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். அவர் பேசும்போது, “நேபாளம் … Read more