தமிழகம் முழுவதும் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு எப்போது? – 7,000 காவல் அதிகாரிகள் காத்திருப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் புதிய சீனியாரிட்டி பட்டியலை எதிர்நோக்கி எஸ்ஐ முதல் கூடுதல் எஸ்பி வரை 7 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 1,299 எஸ்.ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்.4-ம் தேதி வெளியிட்டது. சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் காவல் துறையில் இரண்டாம், முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் விண்ணப்பித்திருந்தனர். காவல் பணியில் உள்ளவர்களுக்கு 20 சதவீத … Read more

இஸ்ரேலை கண்டிக்கும் எஸ்சிஓ அறிக்கை விவாதத்தில் இந்தியா பங்கேற்கவில்லை

ஈரானுடனான போர் தொடர்பாக இஸ்ரேலை கண்டிக்கும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அறிக்கை தொடர்பான விவாதத்தில் இந்தியா பங்கேற்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் குறித்து எஸ்சிஓ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மீதான விவாதங்களில் இந்தியா பங்கேற்கவில்லை. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளை பின்பற்றுமாறு இரு தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். சர்வதேச சமூகம் இந்த … Read more

பழனிசாமியுடன் பாஜக துணை தலைவர் திடீர் சந்திப்பு: முருக பக்தர் மாநாட்டுக்கு அழைத்ததாக தகவல்

சேலம்: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சேலத்​தில் பாஜக மாநிலத் துணைத் தலை​வர் கே.பி.​ராமலிங்​கம் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். சேலம் நெடுஞ்​சாலை நகரில் உள்ள பழனி​சாமி​யின் இல்​லத்​துக்​குச் சென்ற பாஜக மாநிலத் துணைத் தலை​வர் கே.பி.​ராமலிங்​கம், அவருடன் பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து பேசி​னார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ராமலிங்​கம் கூறிய​தாவது: தமிழகத்​தில் ‘நடந்​தாய் வாழி காவிரி’ திட்​டம் மூலம் காவிரி ஆற்​றில் கலக்​கக்கூடிய கிளை நதி​கள், அதே இடத்​தில் சுத்​தப்​படுத்​தப்​படும் திட்​டத்​துக்கு ரூ.11,900 கோடி மதிப்​பீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்கு … Read more

குஜராத் விமான விபத்தில் என்ன நடந்தது? – விமான போக்குவரத்து துறை விளக்கம்

குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் என்ன நடந்தது என்பது பற்றி விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, செயலாளர் சமீர் குமார் சின்ஹா ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர். குஜராத்தின் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி அன்று லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள், விமானம் விழுந்த விடுதியில் இருந்த மருத்துவர்கள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மத்திய … Read more

2026 தேர்தலில் பழனிசாமிதான் முதல்வராவார்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முதல்வராவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரையில் ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக திருவாரூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ.விநாயகம், பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் … Read more

‘தக் லைஃப்' தடைக்கு எதிரான வழக்கு: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக‌ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்த திரைப்படத்தை … Read more

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் … Read more

10 நிமிடம் தாமதமானதால்…  அகமதாபாத் விமான விபத்தில் தப்பிய இளம்பெண்!

அகமதாபாத்: ​விபத்​துக்​குள்​ளான விமானத்​தில் குஜ​ராத்​தின் பரூச் நகரை சேர்ந்த பூமி சவு​கான் என்ற இளம்​பெண் பயணிக்​க​விருந்​தார். ஆனால் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை அதி​காரி​கள் உள்ளே அனு​மதிக்​க​வில்லை. இதுகுறித்து பூமி சவு​கான் கூறுகை​யில், “போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கிக்​கொண்​ட​தால் 10 நிமிடம் தாம​தமாக விமான நிலை​யம் வந்​தேன். பிறகு விமான நிலை​யத்தை விட்டு புறப்​பட​விருந்த நேரத்​தில் விமான விபத்து பற்றி அறிந்​தேன். எனக்கு நடுக்​கம் ஏற்​பட்​டது. எனது கால்​கள் நடுங்​கத் தொடங்​கின. சிறிது நேரம் செயலற்ற நிலை​யில் … Read more

இன்று குரூப்-1 முதல்நிலை தேர்வு

சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கும், உதவி வனப் பாதுகாவலர் பணிக்கும் பொதுவான குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஏறத்தாழ 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: குரூப்-1 பதவிகளில் 70 காலியிடங்களையும் குரூப்-1ஏ பதவியில் (உதவி வனப் பாதுகாவலர்) பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ … Read more

“எப்படி உயிர்ப் பிழைத்தேன் என தெரியவில்லை” – பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் அதிர்ச்சி

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். அவர்களில் ஒரே ஒரு பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் (40) உயிர்த் தப்பியுள்ளார். அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விமானம் மேலெழுந்ததும் ஏதோ கோளாறு ஏற்பட்டது. உடனடியாக பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளி வந்தது. விமானத்தை மேலெழுப்ப பைலட்கள் முயற்சித்தார்கள். ஆனால், விமானம் முழு வேகத்தில் சென்று கட்டிடத்தின் மீது மோதியது. நான் விழித்துப் பார்த்தபோது, என்னை சுற்றியும் … Read more