மார்க் கார்னேக்கு பிரதமர் மோடி வாழ்த்து: கனடா – இந்தியா உறவு இனி?

புதுடெல்லி: கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்திய அரசியல் நகர்வுகளின் தொடர்ச்சியாக, இந்தியா – கனடா இடையிலான உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “கனடாவின் பிரதமராக நீங்கள் (மார்க் கார்னே) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. … Read more

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழப்பு: மதுரை மழலையர் பள்ளிக்கு சீல் வைப்பு

மதுரை: மதுரையில் மழலையர் பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 7 பேரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரை கேகே.நகர் விநாயகா நகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (சீடு கிண்டர் கார்டன்) கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிரிகேஜி, யூகேஜி, எல்கேஜி வகுப்புகளுடன் குழந்தைகளை பகல் நேரங்களில் பராமரிக்கும் மையமும் … Read more

“பஹல்காமில் நடந்தது மத ரீதியிலான தாக்குதல் தான்…” – காங். மாநில தலைவருக்கு கணவரை இழந்த பெண் பதில்

மும்பை: “பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களைத்தான் குறி வைத்தனர், நாங்கள் அதைப் பார்த்தோம். எங்கள் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம். இதை அரசியலாக்க வேண்டாம்” என அந்தத் தாக்குதலில் கணவரை இழந்த பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டிவார், “பயங்கரவாதிகள் மதத்தைக் கண்டறிந்து பின்னர் மக்களைக் கொன்றதாக சொல்லப்படுகிறது. யாரையாவது நெருங்கிச் சென்று அவர்களிடம் அது குறித்து கேட்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா? … Read more

‘நம்பவைத்து ஏமாற்றப்பட்டோம்’ – பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் அரசு மீது குற்றச்சாட்டு

விழுப்புரம்: திமுக ஆட்சியின் இந்த கூட்டத்தொடரை உறுதியாக நம்பி இருந்த பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தெரிவித்துள்ளது. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 2023-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் போராட்டம் நடத்திய பின்னர் ரூ.2,500 சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு 10 லட்சம் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2024-ம் ஆண்டு சம்பள உயர்வு 2,500 … Read more

இந்திய ராணுவத்தின் சைபர்ஸ்பேஸை தாக்க முயன்று பாகிஸ்தான் தோல்வி!

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் சைபர்ஸ்பேஸைத் தாக்க முயன்ற பாகிஸ்தான் ஹேக்கர்கள், அதில் தோல்வி அடைந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்தது வெளிப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக அது இந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 4 வலைதளங்களை ஹேக் செய்ய முயன்றது கண்டறியப்பட்டுள்ளது. ‘IOK ஹேக்கர்’ – கிலாஃபாவின் இணையம் என்ற புனைப்பெயரின் கீழ் செயல்படும் இந்தக் குழு, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இணைய பக்கங்களை சிதைக்கவும், ஆன்லைன் சேவைகளை சீர்குலைக்கவும் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பெறவும் … Read more

‘வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்’ – அமெரிக்கா

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்காட் பெசென்ட், “எங்கள் ஆசிய வர்த்தக கூட்டாளிகளுடனான பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் கடந்த வாரம் இந்தியாவில் இருந்தார். கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்துப் பேசினார். … Read more

“2026-ல் திராவிட மாடல் 2.0” – பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: “இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading அதில் இன்னும் சாதனைகளை படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும்,” என்று பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது: குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்களைத் தடுக்கும் துறையாக காவல்துறை செயல்படவேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். … Read more

மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறை

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சரவை நாளை (ஏப்.30) காலை 11 மணிக்கு கூடுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் மட்டுமே நடத்தப்பட்டது. இதில், பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் … Read more

“இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்லாமாபாத்: இந்திய ராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனை தவிர்க்க முடியாது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் ராய்ட்டரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ராணுவ ஊடுருவல் நிகழும். தற்போது அது தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம். தற்போதைய சூழலில் எத்தகைய யுக்திகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.” என்று பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். இந்தியா தாக்குதல் … Read more

‘குறுவை சாகுபடி குறித்து விவாதிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை  நடத்துக’ – ராமதாஸ்

சென்னை: குறுவை பருவ நெல் சாகுபடி குறித்து விவாதிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வழக்கம் போல ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகளிடையே இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள … Read more