சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய், ஆண் நண்பருக்கு 180 ஆண்டு சிறை தண்டனை: கேரள போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

மலப்புரம்: கேரளா​வில் 12 வயது சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில், தாய், அவரது ஆண் நண்​பருக்கு 180 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது. கேரள மாநிலம் திரு​வனந்​த​புரத்​தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கணவர் மற்​றும் ஒரு பெண் குழந்​தை​யுடன் வசித்து வந்​துள்​ளார். அப்​போது, வேறு ஒரு ஆணுடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, அந்​தப் பெண் கணவரை விட்​டுப் பிரிந்து ஆண் நண்​பருடன் மலப்​புரம் மற்​றும் பாலக்​காடு மாவட்​டங்​களில் வசித்து வந்​துள்​ளார். தனது பெண் குழந்​தையை​யும் … Read more

அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி

நியூயார்க்: அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் ஜனநாயக கட்சி வேட்​பாள​ரும், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி வெற்றி பெற்​றார். அமெரிக்​கா​வின் மிக முக்​கிய​மான நகரங்​களில் நியூ​யார்க் நகர​மும் ஒன்​று. இங்கு நடை​பெற்ற மேயர் தேர்​தலில் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்​தானி போட்​டி​யிட்​டார். இவரது தாய் மீரா நாயர் இந்​தி​யா​வைச் சேர்ந்த சினிமா தயாரிப்​பாளர். தந்தை மகமூத் மம்​தானி உகாண்​டாவைச் சேர்ந்​தவர். ஜோரான் மம்​தானிக்கு 7 வயது இருக்​கும்​போதே அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் குடியேறி​விட்​டார். … Read more

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மேலாளர் ஆஜராக உத்தரவு

மதுரை: திண்​டுக்​கல்​லைச் சேர்ந்த முத்​து, கல்​யாணி, சிவ​சாமி, காளி​முத்து உள்​ளிட்ட 30 பேர், தங்​களுக்கு சொந்​த​மான இடத்தை அரசு கையகப்​படுத்​தி​யதற்​கான இழப்​பீட்டு தொகை கேட்டு தொடர்ந்த வழக்​கில் ரூ.4,37,42,783 இழப்​பீடு வழங்​கு​மாறு மாவட்ட நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து அரசுத் தரப்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இழப்​பீட்​டு தொகையை 8 வாரத்​தில் வழங்க உத்​தர​விட்​டது. ஆனால், இழப்​பீடு வழங்​கப்​பட​வில்​லை. மேல்​முறையீட்டு மனுவை விசாரித்த நீதிப​தி​கள் வேல்​முரு​கன், ராமகிருஷ்ணன், “நிலம் கையகப்​படுத்​தியது தொடர்​பான நிலுவை … Read more

உ.பி.யில் ரயில் மோதி 6 பெண்கள் உயிரிழப்பு

லக்னோ: உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சனூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நேற்று காலை 9.15 மணிக்கு சோபன் – பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. இதில் இருந்து இறங்கிய பயணிகள் சிலர், எதிரில் உள்ள 3-வது நடைமேடைக்கு செல்ல படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது 3-வது லைனில் வேகமாக வந்த நேதாஜி எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. இதில் 6 பெண்கள் உயிரிழந்தனர். இவர்கள் கார்த்திகை பவுர்ணமியை … Read more

அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு கலாச்சார அடையாளமாக அபுதாபியில் இந்திய இல்லம் அமைக்கப்பட உள்ளது. கலை மற்றும் கலாச்சாரத்தில் உறவுகளை வலுப்படுத்துதல், மாணவர் பரிமாற்றம் மற்றும் இருதரப்பு வரலாற்றை முன்னிலைப்படுத்துவதற்கான மையமாக இது செயல்படும். மேலும், இது யோகா பயிற்சி மையமாகவும் செயல்பட உள்ளது. மேலும், உலகளவில் பிரபலமான யோகாவை வளைகுடா நாடு ஒரு … Read more

2026-க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என தேர்வாணைய தலைவர் தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்​டுக்கான தேர்வு அட்​ட​வணை விரை​வில் வெளி​யிடப்​படும் என்று அதன் தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் தெரி​வித்​தார். தமிழக அரசின் பல்​வேறு துறை​களுக்​கான அலு​வலர்​கள் மற்​றும் பணி​யாளர்​கள் டிஎன்​பிஎஸ்​சி வாயி​லாக தேர்வு செய்​யப்​ படு​கின்​றனர். இதன்படி 2026-க்கான போட்டித் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகவுள்ளது. இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் கூறிய​தாவது: குருப்-4 தேர்​வில் வெவ்​வேறு அரசு துறை​களிட​மிருந்து காலிப்​பணி​யிடங்​கள் வந்த வண்​ணம் உள்​ளதால் காலிப்​பணி​யிடங்​கள் மேலும் அதி​கரிக்​கும். அதே போல், ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2ஏ … Read more

பிஹாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு: 121 தொகுதிகளில் 122 பெண்கள் உட்பட 1,314 பேர் போட்டி

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 தேதி​களில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​திருந்​தது. இதன்​படி, மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய இந்த தொகு​தி​களில் மொத்​தம் 122 பெண்​கள் உள்​ளிட்ட 1,314 வேட்​பாளர்​கள் போட்​டி​யில் … Read more

இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை: ராமதாஸ்

சென்னை: தமிழகத்​தில் ஈழத்​தமிழர்​களுக்கு வாக்​குரிமை அளிக்க மத்​திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: இலங்​கையில் 1983-ம் ஆண்டு நடந்த போர் காரணமாக​வும் பல்​வேறு கால​கட்டங்​களி​லும் பல்​லா​யிரக்​கணக்கான ஈழத் தமிழர்​கள் தமிழகத்துக்கு அடைக்​கலம் வந்தனர். உலகின் பல நாடு​கள் ஈழத் தமிழர்​களுக்கு குடி​யுரிமை வழங்​கி​யுள்​ளன. இந்​தி​யா​வில்​தான் ஈழத்தமிழ் மக்​கள் அகதி முகாம்​களி​லேயே ஆயுள் முழுதும் வாழ்ந்து முடிக்​கிறார்​கள். தற்​போதைய தலை​முறை​யா​வது சுதந்​திர​மாக … Read more

மாணவிகளை கால் பிடிக்கச் சொன்ன அரசு ஆசிரியை சஸ்பெண்ட்

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், முள்ளைய்ய பூடி மண்டலம், பண்டபல்லி எனும் கிராமத்தில் கிரிஜன ஆசிரம அரசு மகளிர் பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றும் சுஜாதா எனும் ஆசிரியை, பாடம் சொல்லித் தரும் நேரத்தில் 2 மாணவிகளை அழைத்து, கால்களை பிடித்து விடச் செய்துள்ளார். அப்போது அந்த ஆசிரியை செல்போனில் பேசிக்கொண்டு நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்துகொண்டிருக்கும் ஒரு … Read more

கல்லூரி மாணவருக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை

சென்னை: அரசு கல்​லூரிமாணவ-​மாணவி​களுக்கு டிசம்​பர் மாதம் மடிக்​கணினி விநி​யோகிக்​கப்பட உள்​ளது. இதுதொடர்​பாக துணை முதல்​வர் உதயநிதி தலை​மை​யில் நேற்று ஆலோ​சனை நடை​பெற்​றது. இதில் அமைச்​சர்கள் கோவி.செழியன், தங்​கம் தென்​னரசு, பிடிஆர் பழனிவேல் தியாக​ராஜன் மற்​றும் உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். அப்​போது, நடப்பு கல்வி ஆண்​டில் ரூ.2,000 கோடியில் 10 லட்​சம் மடிக்​கணினி வழங்​குது குறித்​தும்​ எந்த ஆண்டு படிக்​கும் மாணவர்​களுக்கு முதலில் வழங்​கலாம் என்​பது குறித்​தும் ஆலோ​சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Source link