டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவராக முனியநாதன் ஐஏஎஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) பொறுப்பு தலைவராக முனியநாதன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இதன் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு முதல் பாலச்சந்திரன் ஐஏஎஸ் செயல்பட்டு வந்தார்.இந்நிலையில் பாலச்சந்திரனின் பதவிக்காலம் கடந்த ஜூன் 9-ம் தேதியுடன் நிறைவடைந்தது. பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதையடுத்து, தற்போது தேர்வாணையத்தின் உறுப்பினராக இருந்து வரும் முனியநாதன் ஐஏஎஸ் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

புதுச்சேரி | சுண்ணாம்பாறு படகுக்குழாமில் சூரிய உதய படகுசவாரி அறிமுகம்

புதுச்சேரி: சுண்ணாம்பாறு படகு குழாமில் சூரிய உதய படகு சவாரி அறிமுகமாகிறது. அதே நேரத்தில் 24 மணி நேரம் மதுவிற்பனை அனுமதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு இல்ல வளாகத்தில் உணவகம் பொதுமக்களின் வசதிக்காக, உணவு மற்றும் குளிர்பானங்களுக்காக நாள் முழுவதும் (24 × 7) செயல்படும். அத்துடன் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். சுண்ணாம்பாற்றில் நீர் விளையாட்டுகள், சூரிய உதய – படகு சவாரி காலை 06.00 மணி முதல் தொடங்கப்படும். காலை 06.00 … Read more

கரோனா பாதிப்பு: சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கூறுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளது. இருப்பினும் மருத்துவமனையில் கண்காணிப்புக்காக தங்கியிருப்பார். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் அக்கறைக்கு, வாழ்த்துகளுக்கு நன்றி என்று தெரிவித்தார். முன்னதாக கடந்த ஜூன் 2ஆம் … Read more

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 37 அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 37 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பணீந்தர ரெட்டி உள்துறை செயலாளராகவும் , உள்துறைச் செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராகவும், செந்தில்குமார் சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் … Read more

கிரண்பேடி ஆளுநராக இருந்தபோது ராஜ்நிவாஸ் பாதுகாப்புக்கு ரூ.1.28 கோடி அரசின் நிதி வீணடிப்பு: ஆர்டிஐ தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பணியாற்றியபோது, ராஜ்நிவாஸ் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையை வரவழைத்த காரணத்தால் ரூ.1.28 கோடி அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது. கடந்த ஆட்சியில் அமைச்சரவையினர் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பால் ராஜ்நிவாஸ் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புபடையை வரவழைத்தனர். இதற்காக ரூ. 1.28 கோடி அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை செயலரிடம் புகார் தரப்பட்டுள்ளது. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் ஏற்பட்ட அதிகார போட்டியின் உச்சமாக ஆளுநர் மாளிகையான … Read more

'மதச்சார்பின்மைக்கு எதிராக தொடர்ந்து பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல' – திமுக கண்டனம்

சென்னை: “சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அரசியலமைப்புச் சட்டமும், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே ஆளுநர்கள் என்றுதான் சொல்கிறது. அத்தகைய எல்லையை மறந்தும், மீறியும் ஆளுநர் தனது கருத்தளிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது சரியல்ல” திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டுத் … Read more

உ.பியில் ரூ.1,500 கோடியில் தெற்காசியாவின் பெரிய ராணுவ தளவாட வளாகம் – அதானி குழுமம் கையெழுத்து

புதுடெல்லி: அதானி குழுமம் ரூ.1500 கோடி முதலீட்டில் உத்தர பிரதேசத்தில் மிகப்பெரிய ராணுவத் தளவாட தயாரிப்பு வளாகத்தை அமைக்க உள்ளது. 250 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த வளாகம் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய ராணுவத் தளவாட தயாரிப்பு வளாகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு தொடர்பாக உத்தர பிரதேச விரைவு தொழில் மேம்பாட்டு ஆணையம் (யுபிஇஐடிஏ) மற்றும் அதானி குழுமத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கடந்த 6-ம் தேதி உத்தர பிரதேச … Read more

மேகதாது குறித்து காவிரி ஆணையம் விவாதிக்க உச்ச நீதிமன்றத்தில் தடைபெற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்போவதாக காவரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் கூறுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியிருக்கிறார். ஆணையத்திற்கு … Read more

அமலாக்கத் துறை சம்மனில் அரசியல் செய்வது ஏன்? – காங்கிரஸை சாடும் பாஜக

புதுடெல்லி: அமலாக்கத் துறை சம்மன் அனுப்பினால் ஆஜராகாமல் சத்தியாகிரம் செய்கிறோம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்று காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நாளை (ஜூன் 13) அமலாக்கத் துறையில் ஆஜராகவிருக்கிறார். இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 25 அமலாக்கத் துறை அலுவலகங்களின் முன்னர் திரண்டு நின்று போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது … Read more

மதுரை காமராசர் பல்கலை.யில் உயர்வகுப்புக்கு இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுக: ராமதாஸ்

சென்னை: காமராசர் பல்கலைக்கழகத்தில் உயர்வகுப்புக்கு இட ஒதுக்கீடு என்பது சமூக அநீதியாகும். இதனை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் (எம்.எஸ்சி- பயோ டெக்னாலஜி) படிப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட … Read more