தமிழகத்தில் 2021-ல் ரூ.13 கோடி மதிப்பிலான 13,129 கிலோ கஞ்சா பறிமுதல்: அரசு தகவல்

சென்னை: திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் கொடுத்த தகவல்படி 467 ரவுடிகளை கைது செய்துள்ளதாகவும், ஏராளமான ஆயுதங்கள் , புகையிலை, கஞ்சா, 9000 லிட்டர் கலப்பட டீசல், 366 டன் ரேஷன் அரிசி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு துறைகளின் அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் … Read more

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி | 'நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்' – மோடிக்கு  ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது குறித்து பிரதமர் மோடியை கண்மூடித்தனமாக விமர்சிக்கப்போவதில்லை என காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, “மோடி ஜி, முன்பு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தபோது நீங்கள் மன்மோகன் ஜியை விமர்சனம் செய்தீர்கள். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாயின் மதிப்பு தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்காக நான் உங்களை கண்மூடித்தனமாக விமர்சனம் செய்யப்போவதில்லை. ரூபாயின் வீழ்ச்சி ஏற்றுமதி நிபந்தனைகளுக்கு … Read more

அடுக்கப்பட்ட கேள்விகள் – கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயானிடம் போலீஸார் விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னரே கைதாகி தற்போது பிணையில் வெளியே உள்ள சயானிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில், காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீலகிரி மாவட்ட போலீஸார் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதற்கிடையே, தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 25, பெண்கள் 13 என மொத்தம் 38 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 20 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,391 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 15,912 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 62 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 454 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று … Read more

தொழிலாளர்களுக்கான வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்து திருத்தணி வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை

சென்னை: நிலமற்றவர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கிய வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்து திருத்தணி வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த ஜெயவேல், தேவகி உள்ளிட்ட 21 பேர் தாக்கல் செய்த மனுவில், திருத்தணியில் உள்ள நிலமற்ற மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் என 130 பேர் பயனடையும் வகையில் வீடு கட்டுவதற்காக அதிமுக அரசு நிலம் ஒதுக்கியது. அந்த … Read more

மதுரை வைகை ஆற்றின் தடுப்பணையில் குப்பைகள், கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு

மதுரை: மதுரை வைகை ஆற்றின் தடுப்பணை அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவு நீரும் குப்பைகளும் தேங்கி, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தடுப்பணை கட்டப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். வைகை ஆற்றில் மழைக்காலத்தில் ஓடும் தண்ணீரையும், வைகை அணையில் ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரையும் தடுப்பணைகள் கட்டி தேக்கி மதுரை மாநகராட்சியின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வைகை ஆறு குறுக்கே … Read more

ரத்தக்களறியாகும் இலங்கை: ஆளும் கட்சி எம்.பி. அடித்துக் கொலை: தீவிரமாகும் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம்

கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்த மகிந்தா ராஜபக்சே விலகியுள்ள போதிலும் அதிபர் கோத்தபய பதவி விலகக்கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்ட ஆளும் கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல அடித்துக் கொல்லப்பட்டார். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சாலை விபத்துகளில் 15,384 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்துள்ளதாக காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்றும் நாளையும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு இத்துறைகளின் அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்நிலையில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 பேர் மரணம் அடைந்துள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

“கருணை… நம் உலகை மேம்படுத்துகிறது” – அமேசான் ஊழியரின் மெசேஜுக்கு ஜெஃப் பெசோஸ் ரியாக்‌ஷன்

புளோரிடா: அமேசான் ஊழியர் ஒருவரின் செயலைக் கண்டு தனது ரியாக்‌ஷனை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் வெளிப்படுத்தியுள்ளார். “நம் உலகத்தை கருணை மேம்படுத்துகிறது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு பொருட்களை டெலிவரி செய்யும் இ-காமர்ஸ் பணியையும் கவனித்து வருகிறது அமேசான் நிறுவனம். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்த்து வரும் அமேசான் பிரதிநிதியாக உள்ளார் அசானி ஆண்டர்சன். டிரைவரான இவர் ஃபுளோரிடா பகுதியில் பொருட்களை டெலிவரி செய்து வருகிறார். அப்படி அவர் அண்மையில் ஒரு … Read more

ஆர்.ஏ.புரம் குடியிருப்புகள் அகற்றம், தீக்குளிப்பு | “இது கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்” – ஸ்டாலின் விருப்பம்

சென்னை: “இனி வரக்கூடிய காலக்கட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடிய பணியை மேற்கொள்கிற நேரத்தில், முன்கூட்டியே அந்தப் பகுதி மக்களிடம் மறுகுடியமர்வு செய்யக்கூடிய இடம் குறித்து, கருத்துகள் கேட்கப்படும். மேலும், அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளோடு கலந்துபேசி, ஓர் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துவோம். புதிய இடத்தில், அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள்” என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை – ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் … Read more