10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது: பள்ளிக்கல்வித் துறை

சென்னை: 10, 12-ம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுவதாகவும், இத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண் பொதுத்தேர்வுக்கு கணக்கில்கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்2மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. பல்வேறு பாடங்களுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே சமூக ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பணியிடை நீக்கம், வினாத்தாள் வெளியான 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை என பல்வேறு சர்ச்சைகளுடன் … Read more

திருப்பதியில் ரூ.1.50 கோடிக்கு உதயாஸ்தமன சேவை டிக்கெட்: தேவஸ்தானம் வெளியிட்ட 1 மணி நேரத்தில் ரூ.70 கோடிக்கு பக்தர்கள் முன்பதிவு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று உதயாஸ்தமன சேவை டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வெளியிட்டது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை பக்தர்கள் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், இந்த டிக்கெட் ஆன்லைனில் வெளியான ஒரு மணி நேரத்தில் ரூ.70 கோடி வரை கட்டணம் வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முதல் உதயாஸ்தமன சேவை டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. சுவாமிக்கு அபிஷேகம் … Read more

அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயார் என புதின் அறிவிப்பு: உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க தீவிரம்

மாஸ்கோ: உக்ரைனில் போர்ப்பதற்றம் நிலவு வதால் அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நட வடிக்கை எடுத்து வருகிறது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று … Read more

ஜிஎஸ்டி நிலுவை, கரோனா நிவாரணம் ரூ.25,714 கோடியை மத்திய அரசு தரவில்லை; தமிழக உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: தமிழகத்தின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி நிலுவை, கரோனா நிவாரணம் ரூ.25,714 கோடியை மத்திய அரசு தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் பேசியிருப்பதாவது: திமுக அரசு அமைந்தால் என்னவெல்லாம் செய்கிறோம் என சொன்னோமோ, அதில் பெரும்பாலானவாக்குறுதிகளை இந்த 8 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம். இந்த … Read more

கவனக்குறைவு, மது பாட்டில், தலையில் பலத்த அடி… – நடிகர் தீப் சித்து உயிரிழப்பு குறித்து வெளிவந்த தகவல்

சோனிபட்: சமூக ஆர்வலரும், பஞ்சாப் நடிகருமான தீப் சிங் சித்து உயிரிழந்த விபத்துக்குக் காரணம், கவனக்குறைவாக செயல்பட்டதுதான் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சோனிபட் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றப்பட்டது. இதனை ஏற்றியவர் பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பகுதி விவசாயிகளைத் தூண்டி ஊர்வலத்தில் மாற்றங்கள் செய்ததாக … Read more

நடுக்கடல் விபத்தில் தப்பி, கவிழ்ந்த படகில் தத்தளித்த இளைஞர் – உலகை உலுக்கும் புகைப்பட பின்புலம்

அமெரிக்காவின் புளோரிடா நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேலே தனி ஆளாக அமர்ந்து வந்த இளைஞரின் புகைப்படம், உலகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவி, மனதை உலுக்கி வருகிறது. அந்தப் புகைப்படத்திலிருந்தவர் கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயது இளைஞரான ஜுவான் ஸ்டிபன் மோண்டோயா. இந்தப் பயணத்தின் பின்புலமும் வலி மிகுந்தது. விபத்துக்குள்ளான படகில் பல மணி நேரமாக நடுக்கடலில் பயணித்து வந்த ஜுவான், அமெரிக்க கடற்படையால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டபோது, அவரது உடலில் இருந்த அனைத்து நீர்ச்சத்தும் இழந்து … Read more

பிப்ரவரி 16: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,40,531 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் … Read more

கேரளா: எம்எல்ஏ தோழரை கரம்பிடிக்கும் இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்

திருவனந்தபுரம்: இந்தியாவின் இளம் வயது மேயர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான திருவனந்தபுரத்தின் மேயர் ஆர்யா ராஜேந்திரன், இளம் எம்எல்ஏவை திருமணம் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் மேயர் ஆர்யா ராஜேந்திரன். 21 வயதிலேயே மேயராகி, இந்தியா முழுவதும் பேசப்படும் இளம் தலைவரானவர் இந்த ஆர்யா. கடந்த ஆண்டு நடந்த கேரள உள்ளாட்சித் தேர்தலில் முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்ட ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து இவரை மாநகராட்சி … Read more

இரண்டு ஆண்டுகளாக தொற்றிலிருந்து தப்பித்த நாட்டையும் தாக்கியது கரோனா!

2019-ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறது. இருப்பினும், கரோனாவின் கோரத் தாக்குதலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் சில நாடுகள் தப்பித்து இருக்கின்றன என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், பசிபிக் நாடுகளில் ஒன்றான கிரிபாட்டி தனது எல்லையை இரண்டு ஆண்டுகள் மூடியதால் கரோனா தொற்று பரவலைத் தடுத்து நிறுத்தியது. ஆனால், இந்த சாதனை நீடிக்கவில்லை. கிரிபாட்டியில் தற்போது கரோனா பரவத் … Read more

மக்களின் வறுமையை தேர்தலில் சாதகமாக பயன்படுத்துகின்றனர்: பிரேமலதா விஜயகாந்த் தாக்கு

“சட்டப்பேரவை தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களின் வாக்குளைப் பெற்று ஏமாற்றிவிட்டனர்” என திமுக மீது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். கோவையில் தேமுதிக சார்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குறிச்சி பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசியது: “கோவையில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய அமைச்சரும் ரூ.2 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என பணத்தை வழங்குவதில்தான் போட்டிபோட்டு வருகின்றனர். மக்களுக்கோ, கோவைக்கோ ஏதேனும் நல்லது செய்வார்களா என்று சிந்தித்தால், … Read more