தமிழகத்தில் 25 கூடுதல் எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு; கொளத்தூர் பெயரில் புதிய காவல் மாவட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 25 கூடுதல் எஸ்பிக்கள், எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதி பெயரில் புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் கூடுதல் எஸ்பியாக இருந்தஜோஸ் தங்கையா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ளபள்ளிக்கரணை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 10-வது பட்டாலியனில் பணியில் உள்ள வனிதா பதவி உயர்வு பெற்று மதுரை தலைமையக துணைஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.