கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர் பெயர்கள் நீக்கம்: ஆதாரத்துடன் ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கர்நாடகாவின் ஆலந்த் (Aland) தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இத்தகைய திருத்தத்தின் மூலம் வாக்காளர்கள் பலரின் பெயர்கள் பட்டியலில் இருந்து திட்டமிட்ட ரீதியில் நீக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்தைக் … Read more

பாக் – சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி: பாகிஸ்தான் – சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் – சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று நேற்று (புதன்கிழமை) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் (Saudi-Pakistan mutual defence pact) என அழைக்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. … Read more

‘நான் முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக முதல்வர் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது’ – இபிஎஸ்

சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது முகத்தை துடைத்ததை, மூடிக்கொண்டு சென்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 153 … Read more

ஆயுத சண்டை நிறுத்தத்துக்கு தயார்: அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

புதுடெல்லி: “ஒரு மாதம் சண்டை நிறுத்​தம் செய்​கிறோம். இந்​தக் கால கட்​டத்​தில் அமைதி பேச்​சு​வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்” என்று மத்​திய அரசுக்கு மாவோ​யிஸ்ட்​கள் கடிதம் அனுப்​பிய​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்ட் உள்​ளிட்ட சில மாநிலங்​களில் மாவோ​யிஸ்ட்​கள் தொடர்ந்து வன்​முறை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நாட்​டில் இருந்து மாவோ​யிஸ்ட்​கள் முற்​றி​லும் ஒழிக்​கப்​படு​வார்​கள் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளார். அதன்​படி, உள்​ளூர் … Read more

போதைப் பொருள் கடத்தலில் இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு: ட்ரம்ப்

வாஷிங்டன்: போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஆப்கானிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, தி டொமினிசியன் ரிபப்ளிக், ஈகுவேடார், எல் சால்வடார், கவுதமாலா, ஹைதி, ஹொண்டூராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகாராகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசுலா ஆகிய நாடுகள் … Read more

ராமதாஸ் vs அன்புமணி – பலத்தை நிரூபிக்க 100 கார்கள் புடைசூழ வருகை: விழுப்புரத்தில் நடந்தது என்ன?

விழுப்புரம்: பாமகவில் அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களது பரஸ்பர பலத்தை நிரூபிக்க தலா 100 கார்களில் புடைசூழ பவனி வந்து, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ராமதாஸும், அன்புமணியும் இன்று (செப்.17) அஞ்சலி செலுத்தினர். அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் தேதி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் … Read more

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இனிமேல் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம்பெறும்

புதுடெல்லி: வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக இம்முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப … Read more

“அதிமுக தலைமை பொறுப்பில் பழனிசாமி இருப்பது வெட்கக்கேடு!” – கரூர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்

கரூர்: “திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறிய பழனிசாமி, அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பது வெட்கக்கேடு. அதிமுக தொடங்கியபோது, தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்றார்கள். அதை பழனிசாமி அடிமையிசம்னு மாற்றி, இப்போது அமித் ஷாவே சரணம் என்று மொத்தமாக சரண்டராகிவிட்டார்” என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், “இப்போதும் சிலர் திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று என்று பேசுகின்றனர். மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்கள்தான் மாறினார்கள்; மறைந்தும் போனார்கள். ஆனால், திமுக மட்டும் மாறவில்லை. தமிழக … Read more

75-வது பிறந்த நாள் விழா: பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்​வேறு நாடு​களின் அதிபர்​கள், பிரதமர்​கள், ஆன்​மிகத் தலை​வர்​கள் உள்​ளிட்​டோர் வாழ்த்து தெரிவித்​துள்​ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரதமர் மோடி ட்ரம்​புக்கு முன்னதாகவே சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டு​விட்​டார். அதில், “எனக்கு தொலைபேசி​யில் பிறந்த நாள் வாழ்த்து தெரி​வித்த என் நண்​பர், அதிபர் ட்ரம்​புக்கு நன்​றி. உங்​களைப் போல​வே, … Read more

ஒப்போ F31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: ஒப்போ F31 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது … Read more