சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்: 8 பேர் உயிரிழப்பு

பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் -கத்னி வழித்தடத்தில் லால் காதன் என்ற பகுதியில் சரக்கு ரயில் ஒன்று நேற்று மாலை நின்று கொண்டிருந்தது. அதே வழித்தடத்தில் பிலாஸ்பூர் செல்லும் புறநகர் மின்சார ரயிலும் வந்தது. வேகமாக வந்த மின்சார ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ரயில் விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்ச … Read more

மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிற்பபு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இப்போது அறிமுகமாகி உள்ளது. கார்னிங் கொரில்லா … Read more

“பிஹார் தோல்வி உறுதியானதால் ராகுல் காந்தி மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார்” – வானதி சீனிவாசன்

கோவை: பிஹாரில் தோல்வி உறுதியாகிவிட்டதால் மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார் ராகுல் காந்தி என, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ம் தேதி நடக்கிறது. ‘இண்டி’ கூட்டணியின் தோல்வி உறுதியாகியுள்ளது. அந்த விரக்தியில் மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் வழக்கம் போல் வாக்கு திருட்டு என்ற பொய்யை முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் … Read more

போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: உச்ச நீதிமன்றம் கவலை

புதுடெல்லி: ​​போக்சோ சட்​டம் தவறாக பயன்​படுத்​தப்​படு​வது தொடர்​பாக, ஆபாத் ஹர்​ஷ்த் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார். இவரது மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி. நாகரத்​னா, ஆர்​.ம​காதேவன் அடங்​கிய அமர்வு முன் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், ‘‘வளர் இளம் பரு​வத்​தினர் இடையே சம்​மதத்​துடன் நடை​பெறும் உறவில் போக்சோ சட்​டம் தவறாக பயன்​படுத்​தப்​படு​கிறது. போக்சோ சட்​டப் பிரிவு​கள் குறித்து சிறு​வர், ஆண்​கள் மத்​தி​யில் விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டி​யுள்​ளது’’ என்று தெரி​வித்​தனர். Source … Read more

திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்த பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத வழக்கில் டாஸ்மாக் வருமான விபரங்களுடன் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், மாவட்ட மேலாளர் ஆகியோர் நவ. 7ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர் தங்களுக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், திண்டுக்கல்லில் … Read more

“இது வாரிசு அரசியல் அல்ல… நாட்டுக்கான எங்கள் தர்மம்!” – பிஹாரில் பிரியங்கா காந்தி பேச்சு

பாட்னா: காங்கிரஸ் வாரிசு அரசியலை பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டுபவர்களால், எங்கள் முன்னோர்கள் செய்த தியாகங்களை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என பிரியங்கா காந்தி எம்.பி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சம்பாரண் மாவட்டத்தின் வால்மிக நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, “நாங்கள் உங்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறோம். நாட்டின் செல்வம் உங்களுக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். எங்கள் முன்னோர்கள் சுதந்திரத்துக்காகப் போராடினர். உங்கள் முன்னோர்களில் பலரம் சுதந்திரத்துக்காக … Read more

“வாக்குரிமைப் பறிப்பு சதிக்கு எஸ்ஐஆர், ஹரியானா ஃபைல்ஸ் சான்று” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்களின் வாக்கு உரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பிஹாரும், இன்று வெளியாகியுள்ள ஹரியானா ஃபைல்ஸுமே சான்று” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்மைக் காலமாக பாஜக பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத் தன்மை குறித்து மீண்டும் ஒருமுறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் … Read more

பிஹாரில் பாஜக, ஜேடியு ஏன் வீழ்த்தப்பட வேண்டும்? – காரணங்களை பட்டியலிடும் காங்கிரஸ்

புதுடெல்லி: பிஹாரில் வேலைவாய்ப்பின்மை, இடப்பெயர்வு, குண்டர்களின் ஆட்சிக்கு முடிவுகட்ட வாக்காளர்கள் பாஜக – ஜேடியு கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிஹாரில் பத்துக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து மோசடிகள் நடந்துள்ளன. இதனால், லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் பாழடைந்தது. நீதி கோரி அவர்கள் வீதிகளுக்கு வந்தபோது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தேசிய … Read more

தமிழகத்தில் தொடங்கப்பட்ட எஸ்ஐஆர் பணிகளில் பல குழப்பங்கள்: திமுக விவரிப்பு

சென்னை: “எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று திமுகவுக்குத் தெரியும். அதிமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் எஸ்ஐஆரை ஆதரிக்கிறார்கள்” என திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “பிஹாரை அடுத்து இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை நடக்கிறது. இது பல குழப்பங்களை விளைவிக்கும் … Read more

‘பிஹார் தேர்தலுக்காக ஹரியானா கதை சொல்கிறார் ராகுல்’ – வாக்குத் திருட்டு புகாருக்கு பாஜக மறுப்பு

புதுடெல்லி: பிஹார் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஹரியானா விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்புவதாகவும், அவரது குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் பாஜக தெரிவித்துள்ளது. ஹரியானாவில் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாகவும், அது நடக்காமல் இருந்திருந்தால் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும் என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அவரது குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய … Read more