யார் இந்த ஜோரான் மம்தானி? – நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு, வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோரான் மம்தானி (Zohran Mamdani). இவர் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும், முதல் இந்திய அமெரிக்க முஸ்லிம் என்பதும், இந்த நூற்றாண்டில் நியூயார்க்கின் இளம் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யார் இந்த ஜோரான் மம்தானி? – நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ … Read more

கரூர் துயர சம்பவம்: சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்த ஜோதிடர்!

கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க ஒரு ஜோதிடர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அக்.31-ம் தேதி வேலுசாமிபுரத்தில் உள்ள வியாபாரிகளிடம் … Read more

உ.பி.யில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 6 பெண்கள் பலி

சுனார்: உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 6 பயணிகள் உயிரிழந்தனர். சுனார் ரயில் நிலையத்தில் இன்று காலையில் சோபன் – பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் வந்தடைந்தனர். ரயில் 4-வது நடைமேடையில் நின்றதும், அந்த ரயிலிலிருந்து இறங்கிய சில பயணிகள் குறுக்கு வழியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது, மூன்றாவது பிளாட்பார்ம் வழியாகச் செல்லும் கல்கா மெயில் ரயில் அவர்களின் மீது மோதியது. இதில் பெண் பயணிகள் … Read more

தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது: நாஞ்சில் சம்பத்

திருவிடைமருதூர்: தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், திருவிடைமருதூர் வட்டம், 69-சாத்தனூர் திருமூலர் கோயிலில் நடைபெற்ற திருமூலர் குருபூஜை விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய சவால். 2-வது பெரிய கட்சியான அதிமுக, பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு அஸ்தமனத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆக இருக்கும். தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது … Read more

பிஹாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பாட்னா: பிஹாரில் வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார். நவ. 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் பெண்​கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு சார்​பில் அண்​மை​யில் சுமார் ஒரு … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: ‘தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. தங்களின் வாழ்வாதாரத்துக்காக உயிரையும் பணயம் வைத்து மீன்பிடிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 31 பேரையும், அவர்களது 3 படகுகளையும் நவ.3-ம் தேதி இலங்கை கடற்படையினர் … Read more

ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு; காங்கிரஸ் தோற்றது இதனால்தான் – ராகுல் காந்தி

புதுடெல்லி: ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாலேயே காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின்போது அனைத்து கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என சொன்னது. ஆனால், முறைகேடுகள் நடந்ததால் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. ஹரியானாவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை … Read more

தனியார் நிறுவனங்கள் மூலமாக பசுமை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த மின்வாரியம் அனுமதி

சென்னை: தனி​யார் நிறு​வனங்​கள் வாயி​லாக பசுமை மின் உற்​பத்தி திட்​டங்​களை செயல்​படுத்த மின்​வாரி​யத்​துக்​கு, மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது. தமிழகத்​தில் காற்​றாலை, சூரியசக்தி மின் நிலை​யங்​கள் அமைக்க சாதக​மான காலநிலை உள்​ளது. தனி​யார் நிறு​வனங்​கள் ஆர்​வம் காட்​டும் நிலை​யில், மின்​வாரி​யம் அந்த பணி​யில் மெத்​தனம் காட்டி வந்​தது. கடந்த ஆண்​டில், மின்​வாரி​யத்​தில் இருந்து பசுமை எரிசக்தி கழகம் என்ற தனி நிறு​வனம் துவக்​கப்​பட்​டது. இந்​நிறு​வனம், தனி​யார் நிறு​வனங்​கள் வாயி​லாக, பசுமை மின் திட்​டங்​களை செயல்​படுத்​தும் பணி​யில் … Read more

சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (நவம்பர் 4) மாலை 4 மணியளவில் மெமு பயணிகள் ரயில் கோர்பா மாவட்டத்திற்கு அருகிலுள்ள கெவ்ராவிலிருந்து பிலாஸ்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் … Read more

சில்லறை கேட்டு பயணிகளை கட்டாயப்படுத்தக் கூடாது: பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: பேருந்​துகளில் பயணி​களிடம் சில்​லறை கேட்டு கட்​டாயப்​படுத்​தக் கூடாது என்​று, நடத்​துநர்​களுக்​கு, மாநகர போக்​கு​வரத்து கழகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. இதுகுறித்​து, மாநகர போக்​கு​வரத்து கழக இணை மேலாண் இயக்​குனர் வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​: மாநகர பேருந்​துகளில் பயணி​கள் ஏறும்​போது பயணச் சீட்​டுக்கு உரிய சில்​லறை​யுடன் பயணிக்க வேண்​டும் எனக்கூறி வாக்​கு​வாதத்​தில் நடத்​துநர்​கள் ஈடு​படு​வ​தாக பயணி​களிடம் இருந்து தொடர்ச்​சி​யான புகார்​கள் வரு​கின்​றது. எனவே, பேருந்​துகளில் பயணி​கள் ஏறும்​போதே பயணச்​சீட்டு வாங்க சில்​லறை கொடுக்க வேண்​டும் என நிர்​பந்​தம் செய்​யக் கூடாது. பயணச்​சீட்​டைப் … Read more