உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன்: முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெங்களூரு மருத்துவர் 

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள மாரத்தஹள்​ளியை சேர்ந்​தவர் மருத்துவர் மகேந்​திர ரெட்டி (34). இவருக்கும் பெல்​லாரியை சேர்ந்த மருத்துவ​ரான‌ கிருத்​திகா ரெட்​டிக்​கும் (28) கடந்த 2024-ம் ஆண்டு திரு​மண​மான‌து. கிருத்​திகா ரெட்டிக்கு கடந்த ஏப்​ரல் 12-ம் தேதி திடீரென உடல் நலக்​குறைவு ஏற்​பட்டு மயங்கி விழுந்​து உயிரிழந்தார். இதையடுத்து போலீ​ஸார் கிருத்​தி​கா​வின் பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் சேகரிக்​கப்​பட்ட ரத்த மாதிரி,​உறுப்​புகள் சில​வற்றை தடய​வியல் சோதனைக்கு அனுப்​பினர். அதில் பிர​போல் எனப்​படும் அனஸ்​தீசியா மயக்க மருந்து அளவுக்கு அதி​க​மாக … Read more

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நள்ளிரவில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை பிடித்தனர். மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாண்டு படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவியும், அவரது நண்பர் ஆட்டோமொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயதான இளைஞரும், பீளமேடு விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் நகரில் உள்ள காலி இடத்துக்குச் சென்று காரில் … Read more

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ரிசப் பைசோயாவை பிடிக்க இன்டர்போல் ரெட் நோட்டீஸ்

புதுடெல்லி: டெல்லி போலீ​ஸார் ரூ.13,000 கோடி மதிப்​பிலான கொகைன் போதைப் பொருள் கைப்​பற்​றிய வழக்​கில் தேடப்​படும் குற்​ற​வாளியை பிடிக்க இன்​டர்​போல் சிவப்​பு நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது. டெல்​லி, பஞ்​சாப், மும்​பை, ஹைத​ரா​பாத் மற்​றும் கோவா வில் போதைப் பொருட்​கள் அதி​கள​வில் கடத்​தப்​பட்டு விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. இந்​நிலை​யில் டெல்​லி​யில் கடந்​தாண்டு நடை​பெற்ற வாக​னச் சோதனை​யில் ஒரு கிலோ கொகைன்​/மெபட்​ரோன் கைப்​பற்​றப்​பட்​டது. இதில் பிடிபட்ட ஜதிந்​தர் சிங் கில், போதைப் பொருள் கடத்​தல் மன்​னன் ரிசப் என்​பவருடன் டெல்லி ஹட்கோ பேலஸ் … Read more

“பொது அமைதியை குலைக்கும் சேலம் அருளை கைது செய்க” – வழக்கறிஞர் கே.பாலு

சென்னை: பொது அமைதியை குலைக்கும் சேலம் அருளை கைது செய்ய வேண்டும் என பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் கேபாலு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் வடுகத்தம்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களை சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையிலான கும்பல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதுடன், மகிழுந்தை மோதி படுகொலை செய்ய முயன்றுள்ளது. காவல் துறையினர் முன்னிலையிலேயே இந்த காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றிய அருள் தலைமையிலான கும்பல் மீது காவல் துறையினர் இதுவரை … Read more

ரூ.90 லட்சம் கொடுத்து கடன் களங்கத்தில் இருந்து 290 ஏழை விவசாயிகளை மீட்ட சூரத் தொழிலதிபர்

சூரத்: குஜராத் மாநிலம் அம்​ரேலி மாவட்​டத்​தில் உள்ள ஜிரா கிராமத்​தில் உள்ள 290 விவ​சா​யிகளின் போலி கடன்​களை அடைக்க ரூ.90 லட்​சத்தை சூரத்தை சேர்ந்த ஒரு தொழில​திபர் கொடுத்து உதவி​யுள்​ளார். மனிதநே​யம் மற்​றும் தாராளமனப்​பான்​மைக்கு தனது தாயாரின் நினை​வு​நாளில் சூரத் தொழில​திபர் செய்த இந்த சம்​பவம் ஒரு முன்​மா​திரி​யாக மாறி​யுள்​ளது. அம்​ரேலி மாவட்​டம் ஜிரா கிராமத்​தில் உள்​ளூர் கூட்​டுறவு சங்​கத்​தில் அதன் நிர்​வாகி​கள் கிராமத்​தில் உள்ள படிக்​காத ஏழை விவ​சா​யிகளின் பெயரில் கடன்​பெற்று மோசடி செய்​துள்​ளனர். இதனால் … Read more

இரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்

ஈரோடு: தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சலில் எழுத்துபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார். இவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவின் … Read more

வட கிழக்கு மாநிலங்களுக்காக விரைவில் தனி அரசியல் இயக்கம்: மேகாலயா முதல்வர் உள்ளிட்டோர் அறிவிப்பு

வட கிழக்கு மாநிலங்களுக்காக விரைவில் தனித்த ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, பிரத்யோத் மாணிக்யா, கிகோன் ஆகியோர் அறிவித்துள்ளனர். மேகாலயாவின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் முதல்வருமான கான்ராட் சங்மா, திரிபுரா மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியான திப்ரா மோதா கட்சியின் தலைவர் பிரத்யோத் மாணிக்யா, நாகாலாந்து மாநில பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் எம்.கிகோன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கான்ராட் … Read more

“சார் என்றாலே திமுகவுக்கு பயம்!” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

நாமக்கல்: அண்ணா பல்கலை. விவகார சார், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சார் (எஸ்ஐஆர்) என எந்த சார் என்றாலும் திமுகவுக்கு பயம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். நாமக்கல் பூங்கா சாலையில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசியது: “தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய பாஜக அரசு வழங்கியது. இதனை வாங்கித் தந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இங்குள்ள எம்பி … Read more

பிஹாரில் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பதை உறுதி செய்ய பாஜகவினருக்கு மோடி அறிவுறுத்தல்

புதுடெல்லி: பிஹாரில் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பாஜக பெண் தொண்டர்களுக்கு பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. முன்னதாக, பிஹார் பாஜக பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த தேர்தலில் நான் எங்கு சென்றாலும், எங்கு பேசினாலும் பாஜக தொண்டர்கள் … Read more

“பாஜக நமக்கு எதிரி… காங்கிரஸ் துரோகி!” – திருச்சியில் சீமான் பேச்சு

திருச்சி: “பாஜக நமக்கு வெளிப்படையான எதிரி. காங்கிரஸ் நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய துரோகி” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலகத் தமிழ்க் கிறிஸ்தவர் இயக்கம் சார்பில் நடைபெற்ற ‘உரையாடுவோம் வாருங்கள்’ எனும் தலைப்பிலான நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியது: “சிறுபான்மையினருக்கு வேண்டியது உரிமை, சலுகை அல்ல. 60 … Read more