கரூர் பேருந்து நிலையம் அருகே இபிஎஸ் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி வழக்கு: மீண்டும் மனு அளிக்க உத்தரவு

மதுரை: கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்பியிடம் மீண்டும் மனு அளிக்க அதிமுகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருவிக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் – கோவை சாலையில் செப். 25-ம் தேதி மாலை 06.30 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி … Read more

அனைத்து மதங்களையும் நம்​பு​கிறேன், மதிக்கிறேன்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் விளக்கம்

புதுடெல்லி: ​நான் அனைத்து மதங்​களை​யும் நம்​பு​கிறேன். அனைத்து மதங்​களை​யும் மதிக்​கிறேன் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரி​வித்​துள்​ளார். மத்​திய பிரதேசத்​தின் சத்​தர்​பூர் மாவட்​டத்​தில் கஜு​ராஹோ கோயில்​கள் அமைந்​துள்​ளன. கடந்த 10, 11-ம் நூற்​றாண்​டில் சந்​தேல மன்​னர்​களால் இந்த கோயில்​கள் கட்​டப்​பட்​டன. கடந்த 12-ம் நூற்​றாண்​டின்​போது சுமார் 20 சதுர கிலோ மீட்​டர் பரப்​பள​வில் 85-க்​கும் மேற்​பட்ட கோயில்​கள் இருந்​த​தாக வரலாற்று பதிவு​கள் குறிப்​பிடு​கின்​றன. முகலாயர் ஆட்​சிக் காலத்​தில் கஹு​ராஹோ கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. இதன்​காரண​மாக தற்​போது … Read more

நாகப்பட்டினம், திருவாரூரில் நாளை விஜய் சுற்றுப்பயணம்: இடம், நேரம் அறிவிப்பு

சென்னை: தவெக தலைவர் விஜய் தனது தமிழக சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.13) அன்று திருச்சியில் தொடங்கினார். அந்த சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து நாளை (செப்.20) நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக தவெக தலைமை நிலையக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், … Read more

தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்க முடியுமா? – வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து திக்விஜய சிங் சந்தேகம்

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங், நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்கலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுவது தொடர்பான ஒரு செய்தியை பகிர்ந்து திக்விஜய சிங் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘இன்றைய மேம்பட்ட தொழில்நுட்ப யுகத்தில் நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்க முடியுமா? சற்று யோசித்துப் பாருங்கள். வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவின் தேர்தல்களை நடத்த வேண்டாமா?. … Read more

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி சிபிஎம் தீர்மானம்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​ தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2025 செப்டம்பர் 18,19 தேதிகளில் கோவில்பட்டியில் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்திய குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே. பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் … Read more

தெலங்கானா இளைஞர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? – உடலை இந்தியா கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை!

ஹைதராபாத்: அமெரிக்காவில் தெலங்கானாவை சேர்ந்த 30 வயதான மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர் போலீஸாரால் கடந்த 3-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடலை தாயகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் உதவியை அணுகி உள்ளனர். இதன் மூலம் இந்திய தூதரகத்தின் துணை அவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். தெலங்கானா மாநிலத்தின் மஹபூப்நகரைச் சேர்ந்தவர் முகமது நிசாமுதீன். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் உடன் இருந்தவருடன் ஏற்பட்ட … Read more

இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நான் மிக நெருக்கமாக உள்ளேன்: இங்கிலாந்தில் ட்ரம்ப் பேச்சு

செக்கர்ஸ்: இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது என்றும், பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கிராமப்புற இல்லமான செக்கர்ஸில் ஸ்டார்மருடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ட்ரம்ப், “ நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளேன், நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவை கொண்டுள்ளேன். சமீபத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் … Read more

சென்னையில் வைர வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர் வீடு உட்பட 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகாரில் வைர வியா​பாரி, ரியல் எஸ்​டேட் அதிபர் வீடு உட்பட சென்​னை​யில் 6 இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடை​பெற்​றது. சென்னை சைதாப்​பேட்டை ஸ்ரீநகர் காலனி​யில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் ரெட்​டி. ரியல் எஸ்​டேட் நிறு​வனம் நடத்தி வரு​கிறார். சென்னை மற்​றும் புறநகரில் பிரம்​மாண்ட கட்​டிடங்​களை கட்​டிவரும் இவரது நிறு​வனம், அரசு சார்​பில் நடை​பெறும் பல்​வேறு கட்​டு​மானப் பணி​களி​லும் ஈடு​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், இவரது வீட்​டில் நேற்று காலை​முதல் துப்​பாக்கி ஏந்​திய … Read more

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

புதுடெல்லி: ஐக்​கிய அரபு அமீரக (யுஏஇ) தலைநகர் அபு​தாபி​யில் நேற்று இந்​திய, யுஏஇ உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மத்​திய வர்த்​தக அமைச்​சர் பியூஷ் கோயல் பங்​கேற்​றார். அப்​போது அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் மிக நெருங்​கிய நட்பு நாடு​கள். இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்தை சரியான திசை​யில் செல்கிறது. இந்​தி​யா​வின் நம்​பக​மான நட்பு நாடாக அமெரிக்கா விளங்​கு​கிறது. இரு நாடு​களுக்​கும் பலன் அளிக்​கும் வகை​யில் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும். இவ்​வாறு … Read more

ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தடை!

காபூல்: ஆப்​கானிஸ்​தானில் மேலும் 5 மாகாணங்​களில் ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. வடக்கு ஆப்​கானிஸ்​தான் பால்க் மாகாணத்​தில் கடந்த செவ்​வாய்க்​கிழமை ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. ஒழுக்கக்கேட்டை தடுக்​கும் நடவடிக்​கை​யாக இத்​தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக மாகாண அரசு தெரி​வித்​தது. இந்​நிலை​யில் தலி​பான் தலை​வரின் உத்​தர​வின் பேரில் பாக்​லான், பதக் ஷான், குண்​டுஸ், நங்​கர்​ஹர், தகார் ஆகிய மாகாணங்​களி​லும் ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு நேற்று முன்​தினம் தடை விதிக்​கப்​பட்​டது. ஆப்​கானிஸ்​தானில் ஆட்சி அதி​காரத்தை … Read more