“உங்கள் வேலை போய்விட்டது” – ஊழியர்களுக்கு அதிகாலையில் அதிர்ச்சி கொடுத்த அமேசான் நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றான அமேசான், அண்மைக்காலமாக ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருவது பேசுபொருளானது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பல்வேறு குழுக்களை சேர்ந்த 14,000 பேரை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பை தெரியப்படுத்தும் நோக்கில், அதிகாலையில் இரண்டு குறுஞ்செய்திகள் வாயிலாக அனுப்பியுள்ளது அமேசான் நிறுவனம். முதலில் வந்த குறுஞ்செய்தியில், ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு முன்னால் தங்கள் இ-மெயிலை பார்க்கவும் என்றும், அடுத்த … Read more

மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை வசம் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று எழுதிய கடிதத்தில், ‘நவ.3-ம் தேதி (இன்று) நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளனர். மீனவர்களின் வாழ்க்கையும், … Read more

ஜெய்ப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதி 10 பேர் பலி; 30 பேர் படுகாயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர், சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜெய்ப்பூரின் லோஹா மண்டி பகுதியில் வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கார், பாதசாரிகள் ஆகியோர் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நெருக்கடி … Read more

விவோ Y19s  ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y19s போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ … Read more

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம்: தமிழகம் தழுவிய பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (நவ.4) பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது குறித்து கோவையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவையில் ஆண் நண்பருடன் காரில் இருந்த 19 வயது கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது பெண்களுக்கு எதிரான பாலியல் மாடல் ஆட்சி என்றுதான் கூற வேண்டும். 2013ம் ஆண்டு … Read more

கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மீது குற்றச்சாட்டு: நவ.10-ல் நீதிமன்ற விசாரணை தொடக்கம்

பெங்களூரு: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் 15 பேர் மீது பெங்களூரு 64-வது அமர்வு நீதிமன்றம் இன்று கொலை, குற்றவியல் சதி, கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் வாதிட்டதால், இவ்வழக்கின் விசாரணை நவம்பர் 10-ஆம் தேதி தொடங்குகிறது. பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் … Read more

3 ஆண்டுகளில் பறிபோன 1.5 லட்சம் உயிர்கள்: சூடான் வன்முறையின் ரத்தப் பின்னணி!

விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான். இத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று அங்கு நிகழும் அவலங்கள் உலகின் மிக மோசமான ‘மனிதாபிமான நெருக்கடி’ கொண்ட நாடாக அதை மாற்றியுள்ளது. ‘ரத்தம் குடிக்கும் அதிகாரப் பசி’ – சூடானில் உள்நாட்டுப் போர் தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. சூடான் தேசிய ராணுவத்துக்கும், அந்நாட்டின் துணை ராணுவப் படையான … Read more

கிருஷ்ணகிரி: அரசம்பட்டி அருகே மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: அரசம்பட்டி அருகே மஞ்சமேடு கிராமத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்து வணிக கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை அளித்த தகவலின்பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மஞ்சமேடு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கோட்டீஸ்வர நயினார் என்பவரின் தென்னந்தோப்பில் கிழக்கு நோக்கிய நிலையில் ஒரு கல்வெட்டு படைப்பு சிற்பத்தோடு காணப்பட்டது. இதன் இரு பக்கத்திலும் கல்வெட்டு உள்ளது. இது குறித்து காப்பாட்சியர் … Read more

“பிஹாரை அடமானம் வைக்க விரும்புகிறது என்டிஏ கூட்டணி” – அகிலேஷ் யாதவ்

சப்ரா: தேசிய ஜனநாயக கூட்டணி பிஹாரை அடமானம் வைக்க விரும்புவதாகவும், பாஜக எப்போதும் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைப்பட்டதில்லை என்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். சப்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “தேசிய ஜனநாயகக் கூட்டணி பிஹாரை அடமானம் வைக்க விரும்புகிறது. தேஜஸ்வியின் வேலைவாய்ப்பு வாக்குறுதி, பெண்களுக்கு ரூ.2500 நிதியுதவி அளிப்பது குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள், இதனால் அவர்கள் பதற்றமாக உள்ளனர். இந்த முறை, பிஹார் மக்கள் நல்லிணக்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். வங்கிக் கணக்கில் ரூ.15 … Read more

“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்லாமாபாத்: நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானின் ஜியோ செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவாஜா ஆசிப், “ஆப்கனிஸ்தானை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பொம்மலாட்டத்தில் பொம்மைகளை பின்னால் இருப்பவர்கள் இயக்குவதுபோல, ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது. இந்தியா சொல்படி பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கனிஸ்தான் செயல்படுகிறது. ஆப்கனிஸ்தான் மூலம் பினாமி போரை பாகிஸ்தான் … Read more