எஸ்ஐஆர் பணிகள் குறித்து அச்சம் தேவையில்லை: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. இப்பணிகள் எதிர்ப்பார்த்தைவிட சிறப்பாக மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. சென்னை தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, தி.நகர் … Read more

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை: பிஹார் பிரச்சாரத்தில் பிரியங்கா உறுதி

சோன்பர்சா (பிஹார்): பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதிப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிஹாரில் முதல்கட்டத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், சோன்பர்சா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான … Read more

‘தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத திமுக அரசு வெட்கப்பட வேண்டும்’ – தவெக

சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என தவெக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்பதற்கு, கோவை தனியார் கல்லூரி மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வன்முறை மற்றுமொரு சாட்சி. போதை கலாச்சாரத்தால் தமிழகத்தின் … Read more

கர்நாடக முதல்வர் விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது: சித்தராமையா

பெங்களூரு: கர்நாடக முதல்வர் விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதல்வர் மாற்றம் தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சித்தராமையா, “பலரும் பல கருத்துக்களைத் தெரிவிக்கலாம். கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது. இது தொடர்பாக கட்சித் தலைமை இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை. அமைச்சரவை மாற்றம் குறித்து பிஹார் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தலைமையிடம் … Read more

மீனவர்கள் கைதுக்கு நிரந்தரத் தீர்வு: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முதல்வருக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மீனவர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நாகை மாவட்டத்தில் இருந்து வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 3 விசைப் படகுகளும், ஒரு … Read more

“இதெல்லாம் பொய்” – முதல்வர் வேட்பாளர் குறித்த பிரதமர் குற்றச்சாட்டுக்கு கார்கே பதில்

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸிடமிருந்து முதல்வர் வேட்பாளர் பதவியை திருடிவிட்டதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மறுத்துள்ளார். மேலும், துப்பாக்கி முனையில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக்க சொல்லி யாரும் மிரட்ட முடியாது என்றும் அவர் கூறினார். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியிடமிருந்து முதல்வர் வேட்பாளர் பதவியைத் திருடிவிட்டதாகவும், துப்பாக்கி முனையில் காங்கிரஸை மிரட்டி தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கட்டாயப்படுத்தியதாகவும் நேற்று பிஹாரின் அர்ராவில் நடந்த … Read more

தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகம் முழு​வதும் 59 டிஎஸ்​பிக்​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். தமிழக காவல் துறை​யில் விருப்​பத்​தின் அடிப்​படை, நிர்​வாக வசதி உட்பட பல்​வேறு காரணங்​களுக்​காக போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​படு​கின்​றனர். அந்த வகை​யில் 59 டிஎஸ்​பி-க்​கள் (காவல் துணை கண்​காணிப்​பாளர்) பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதற்​கான உத்​தரவை பொறுப்பு டிஜிபி வெங்​கட​ராமன் பிறப்​பித்​துள்​ளார். அதன்​படி, காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த டிஎஸ்பி கீதா, சென்னை சிபிசிஐடி ‘சைபர் க்ரைம்’ பிரிவுக்​கும், மதுரை சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு … Read more

பிஹார் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த 2 மாதத்தில் கிரிமினல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: ‘‘பிஹாரில் மகாபந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்த 2 மாதங்களுக்குள், என்டிஏ தஞ்சம் அளித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார். பிஹார் மாநிலம் மொகாமா சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் ஐஜத கட்சி வேட்பாளர் ஆனந்த் சிங் போட்டியிடுகிறார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆதரவாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், ஆனந்த் சிங்கை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த … Read more

சென்னையில் பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் சீரமைப்பு

சென்னை: பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள உட்புற சாலைகளில்தார் சாலை, சிமென்ட் கான்கிரீட் சாலை மற்றும் இணைப்பு கற்கள் அமைக்கும் பணிக்காக 2025-26 நிதியாண்டில் 3,908 சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 2,790 சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன, தற்பொழுது 207 சாலைகளில் சிமென்ட் கான்கிரீட் மற்றும் இணைப்பு கற்களைக் கொண்டு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து தட … Read more

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து: 20 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் இன்று காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர். விகாராபாத் – ஹைதராபாத் சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லாரி ஆர்டிசி பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 20 பேர் இறந்ததாக … Read more