கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை: கல்லறை தோட்டங்களில் குடும்பம் குடும்பமாக குவிந்த கிறிஸ்தவர்கள்
சென்னை: கல்லறைத் திருநாளைஒட்டி சென்னையில் நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனையும், கல்லறைத் தோட்டங்களில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. கல்லறைத் தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று இறந்த உறவினர்களுக்காக ஜெபம் செய்தனர். கிறிஸ்தவர்கள் ஒவ்வோர் ஆண்டும் நவ.2-ம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் தினமாக அனுசரிக்கிறார்கள். இந்நாள் கல்லறைத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லறைத் திருநாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களில் இறந்த உறவினர்கள், பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் நண்பர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை சுத்தப்படுத்தி, … Read more