தமிழகத்தில் யானை வழித்தடங்கள் குறித்து பிப்ரவரியில் அரசிடம் அறிக்கை தாக்கல்: வனத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்கள் முழுமையாக கண்டறியப்பட்டு, அது குறித்து இறுதி அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் அரசிடம் தாக்கல் செய்ய இருப்பதாக வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் யானைகள் வழித்தடங்கள் பாதுகாப்பது தொடர்பாக, விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில், ஒருங்கிணைந்த யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து, அது பற்றிய விவரங்களை தாக்கல் … Read more

நாட்டின் வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அளப்பரியது: கார்கேவுக்கு அமித்ஷா பதிலடி!

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமித்ஷா, “நாட்டை சிறந்த இடமாக மாற்ற என்னைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களை ஊக்குவித்த அமைப்பு ஆர்எஸ்எஸ் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது தேசபக்தி மற்றும் ஒழுக்கத்தின் மதிப்புகளை விதைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் உருவாக்கிய இரண்டு பேர் (அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி) … Read more

நவ.5-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் நவம்பர் 5-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், 5.11.2025 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட … Read more

“இந்த முறை முதல்வர் ஆக முடியாது என்பது நிதிஷ் குமாருக்கு தெரியும்” – அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: “இந்த முறை தான் முதல்வர் ஆக முடியாது என்பது நிதிஷ் குமாருக்குத் தெரியும். அதனால்தான், நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை” என ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிஹார் தேர்தலுக்கு நிதிஷ் குமார் அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு … Read more

சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு: உயிர் பயத்தில் மக்கள் – நடப்பது என்ன?

கர்த்தூம்: வடகிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-ஃபாஷர் நகரை கைப்பற்றி உள்ளது பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப். இந்த நகரை கைப்பற்றும் தங்கள் முயற்சியில் தங்களுக்கு துஷ்பிரயோகம் செய்த போராளிகள் பலரை கைது செய்துள்ளதாக ஆர்எஸ்எஃப் தெரிவித்துள்ளது. அல்-ஃபாஷர் நகரில் சுமார் 1.77 லட்சம் மக்களின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. 65,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த … Read more

“கோடநாடு வழக்கில் இபிஎஸ் ஏ1 எனில் பிடித்து உள்ளே போடுங்கள்…” – திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம்

மதுரை: “கோடநாடு வழக்கில் பழனிசாமி ஏ1 குற்றவாளியாக இருந்தால் பிடித்து உள்ளே போடுங்கள்; யார் வேண்டாம் என்றது? திமுக ஆட்சிதானே நடக்கிறது” என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசமாக கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை குருபூஜை விழாவுக்காக மதுரை வங்கி பெட்டகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டது. தற்போது விழா நிறைவுற்றதை தொடர்ந்து தங்க கவசத்தை மீண்டும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் … Read more

“நக்சல் வன்முறையின் அடையாளமாக இருந்த சத்தீஸ்கர் இன்று செழிப்பின் சின்னம்…” – பிரதமர் மோடி

ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்ற அடையாளத்தில் இருந்து செழிப்பு மற்றும் பாதுகாப்பின் சின்னமாக சத்தீஸ்கர் மாறி இருப்பது ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் புதிய சட்டமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். பின்னர் பேசிய அவர், “சட்டமன்றம் என்பது சட்டங்களை உருவாக்குவதற்கான இடம் மட்டுமல்ல, மாநிலத்தின் விதியை வடிவமைப்பதற்கான துடிப்பான மையம். சட்டமன்றத்தில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு சிந்தனையும் சேவை உணர்வையும், வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பையும், இந்தியாவை மிகப் பெரிய உயரத்துக்குக் … Read more

“நகராட்சித் துறை முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும்” – கிருஷ்ணசாமி

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு தொடர்பாக, அத்துறை அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் அடுத்த ஆண்டு ஜன.7-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து விளக்குவதற்காகவும், கிராம மக்களின் பிரச்சினைகளை தெரிந்துகொள்ளவும் … Read more

‘இந்திக்கு முக்கியத்துவம்; பிற மொழிகள் புறக்கணிக்கப்பு’ – சித்தராமையா ஆதங்கம்

பெங்களூரு: இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மேம்படுத்த மத்திய அரசு அதிகளவிலான நிதியை வழங்குவதாகவும், மற்ற இந்திய மொழிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் உருவான 70-வது தினத்தை முன்னிட்டு பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சித்தராமையா, “கன்னடத்துக்கு எதிரான அனைவரையும் நாம் எதிர்க்க வேண்டும். கர்நாடக மாநிலம் மத்திய அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி வருவாயை வழங்குகிறது. ஆனால் அதற்குப் பதிலாக ஒரு சிறிய பகுதியை மட்டுமே திரும்பப் பெறுகிறது. கன்னட மொழிக்கு … Read more

‘அந்த 4 பேரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை’ – திண்டுக்கல் சீனிவாசன்

மதுரை: “சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகிய நான்கு பேரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று மதுரையில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர் கூறியதாவது: ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் டிடிவி தினகரன். அவர் அதிமுகவை பற்றி சொல்வதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு ஆளே கிடையாது. அதேபோல், பழனிசாமிக்கு முன்பாக பிறந்துள்ளவர் என்ற ஒரு தகுதியை … Read more