பிஹார் மக்களின் நிகழ்காலத்தைப் பற்றி பாஜக தலைவர்கள் பேசுவதில்லை: பிரியங்கா காந்தி

பெகுசராய் (பிஹார்): பாஜக தலைவர்கள் கடந்த காலம் குறித்தும் எதிர்காலம் குறித்துமே பேசுகிறார்களே தவிர நிகழ்காலம் பற்றி பேசுவதில்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெகுசராய் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, “பிஹாரில் இருந்துதான் மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடங்கினார். பிஹார் நிலம் நாட்டுக்கு நிறைய கொடுத்துள்ளது. இந்த நிலம் நாட்டுக்கு சுதந்திரம், முன்னேற்றம், சிறந்த தலைவர்கள், முக்கிய அதிகாரிகள், … Read more

“கோவை மாவட்டம் இனி திமுகவின் கோட்டை” – செந்தில் பாலாஜி நம்பிக்கை

கோவை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் திமுக அதிக வாக்குகளை பெற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் சிங்காநல்லூரிலும், கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தொண்டாமுத்தூரிலும், கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈச்சனாரியிலும், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். சிங்காநல்லூர் கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் … Read more

‘பிஹார் மக்கள் மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்துவிட்டனர்’ – தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை

பாட்னா: ‘பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் சிறப்பாக நடக்கிறது. இந்த முறை மகா கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும். பிரச்சாரத்தில் நான் எங்கு சென்றாலும், மக்கள் மாற்றம் நிச்சயம் என்று கூறுகிறார்கள். மக்கள் பிஹாரில் மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளனர்’ என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். பிஹார் தேர்தலில் மகா கூட்டணியின் தேர்தல் வாய்ப்புகள், ஆர்ஜேடி குறித்த பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் … Read more

திமுக 13 மதிப்பெண் பெற்று ஃபெயில்: அன்புமணி ராமதாஸ்

சேலம்: பொதுமக்களுக்கு அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 13 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக செயல்படுத்தியதன் மூலம் திமுக 13 மதிப்பெண் பெற்று ‘பெயில்’ ஆகிவிட்டது. அடுத்த 6 மாதத்தில் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும், என அன்புமணி தெரிவித்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில் வசிஷ்ட நதியை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது: மேட்டூர் உபரி நீரை சரபங்கா … Read more

ஆந்திராவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்

ஸ்ரீகாகுளம்: ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால், கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கியதில் பலர் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் … Read more

கரூர்: மணல் லாரி கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம் தென்னிலை அருகே எம் சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகேயுள்ள கோடந்தூரில் தனியார் கிரஷர் செயல்படுகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இன்று (நவ.1) அதிகாலை 5 மணிக்கு எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு லாரி கோவை புறப்பட்டது. கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த சந்தனகுமார் (41) லாரியை ஓட்டிச் … Read more

‘நாங்கள் எங்கள் குடும்பங்களுக்காக அல்ல, அனைவருக்காகவும் பாடுபடுகிறோம்’ – நிதிஷ் குமார்

பாட்னா: ‘பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனைத்து சமூகப் பிரிவுகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறது. நாங்கள் எங்கள் குடும்பங்களுக்காக அல்ல, அனைவருக்காகவும் பாடுபடுகிறோம்’ என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் வெளியிட்ட வீடியோ செய்தியில், “நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம் 15 ஆண்டுகாலம் காட்டாட்சி நடத்தியது. அதன்பிறகு … Read more

அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்த போலி மருத்துவர் கைது

சென்னை: யோகா பயிற்​றுநர் மற்​றும் அரசு வேலை வாங்கித் தரு​வ​தாக பலரிடம் லட்​சக்​கணக்​கில் பணத்தை சுருட்​டிய போலி மருத்​து​வர் கைது செய்​யப்​பட்​டார். சென்னை வில்​லி​வாக்​கம், சி.டி.எச். சாலை​யைச் சேர்ந்​தவர் ரத்​தினகு​மாரி (48). இவர் சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தில் கடந்த 17-ம் தேதி புகார் ஒன்றை அளித்​தார். அதில், “யோ​கா​வில் பிஎச்டி முடித்​து​விட்​டு, யோகா கற்க ஆர்​வ​முள்​ளவர்​களுக்கு நான் பயிற்சி அளித்து வரு​கிறேன். 2024 டிசம்​பரில் முகநூலில் டாக்​டர் சுரேந்​தர் என்​பவர், ஒரு … Read more

தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வழக்கில் தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தெரு நாய்​கள் விவ​காரத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட மாநிலங்​களின் தலை​மைச் செய​லா​ளர்​கள் நவம்​பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய்​கள் தொல்லை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளது. இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, பதில் மனு தாக்​கல் செய்​யாத தமிழ்​நாடு உள்​ளிட்ட மாநில தலை​மைச் செய​லா​ளர்​கள் நவம்​பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும் … Read more

பேட்மிண்டன் வீராங்கனைக்கு ரூ.5 லட்சம்: துணை முதல்வர் வழங்கினார்

சென்னை: ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை எஸ்.ஆர். தீக்ஷாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையை துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சீனாவில் கடந்த அக்.21 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்ற பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று தமிழக வீராங்கனை எஸ்.ஆர்.தீக்ஷா சாதனை படைத்துள்ளார். இதையடுத்து அவரை ஊக்கப்படுத்தும் விதமாக வீராங்கனை எஸ்.ஆர்.தீக்ஷாவுக்கு துணை … Read more