“எங்கள் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது என்டிஏ” – தேஜஸ்வி விமர்சனம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்கள் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவை என தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், “அவர்கள் எல்லாவற்றையுமே காப்பி அடிக்கிறார்கள். அவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் எங்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவையே. சமீபத்தில் நாங்கள் … Read more

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநில தலைவர் அன்பழகன் தலைமையில், இன்று அக்கட்சியினர் உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மின்துறை தலைமை அலுவலகம் முன்பு வந்தனர். அங்கு மின்கட்டண உயர்வை கண்டித்தும், அரசு அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் … Read more

என்டிஏ தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் நிதிஷை பேச அனுமதிக்கவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முதல்வர் நிதிஷ் குமாரை பேச அனுமதிக்கவில்லை என்றும், இது பிஹார் மற்றும் பிஹாரிகளுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மஞ்சி, சிராக் … Read more

அமெரிக்காவில் வெளி​நாட்​டினருக்கு வழங்​கப்​பட்ட தானி​யங்கி முறை பணி நீட்​டிப்பு அனுமதி ரத்து

வாஷிங்​டன்: வெளி​நாடு​களில் இருந்து அமெரிக்​கா​வில் குடியேறு​பவர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. 2022-ம் ஆண்டு கணக்​கெடுப்​புப்​படி அமெரிக்​கா​வில் இந்​திய அமெரிக்​கர்​கள் 48 லட்​சம் பேர் இருந்​தனர். இவர்​களில் 66% பேர் அமெரிக்​கா​வில் குடியேறிய​வர்​கள், 34% பேர் அமெரிக்​கா​வில் பிறந்​தவர்​கள். வெளி​நாட்​டினரின் எண்​ணிக்​கையை குறைக்க அமெரிக்க அரசு பல நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. சமீபத்​தில் வெளி​நாட்டு தொழிலா​ளர்​களுக்கு வழங்​கப்​படும் எச்​1பி விசா கட்​ட​ணத்தை 1 லட்​சம் டால​ராக உயர்த்​தி​யது. தற்​போது வெளி​நாட்டு தொழிலா​ளர்​களுக்கு தானி​யங்கி முறை​யில் வழங்​கப்​பட்டு வந்த பணி … Read more

சென்னையில் மீண்டும் வரும் ஃபோர்டு நிறுவனம் மூலம் 600 பேருக்கு வேலை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: ஃபோர்டு நிறுவனத்தால் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வாகன இன்ஜின் (Next-Gen Engine) உற்பத்தி ஆலை சென்னையில் அமையவுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ‘முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம். ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. … Read more

தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்பு

ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், முகமது அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத அவரை ஆளுநர் கோட்டாவில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்ய தெலங்கானா அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் … Read more

​பாக். ராணுவ தாக்​குதல்: பலுசிஸ்​தானில் 18 போராளி​கள் உயி​ரிழப்பு

கராச்சி: பாகிஸ்​தானின் பலுசிஸ்​தான் மாகாணத்​தில் அந்​நாட்டு ராணுவ தாக்​குதலில் 18 போராளி​கள் உயி​ரிழந்​தனர். உளவுத் தகவலின் அடிப்​படை​யில் பலுசிஸ்​தானின் குவெட்டா மாவட்​டம், சில்​டன் மலைத்​தொடரிலும், கெச் மாவட்​டத்​தின் புலே​டா​விலும் பாகிஸ்​தான் ராணுவம் புதன்​கிழமை இரவு தேடு​தல் பணி மேற்​கொண்​டது. இதில் ராணுவத்​தினர் – பலுசிஸ்​தான் போராளி​கள் இடையே கடும் துப்​பாக்​கிச் சண்டை ஏற்​பட்​டது. இதில் 18 போராளி​கள் உயி​ரிழந்​தனர். அங்​கிருந்து ஆயுதங்​கள், வெடிபொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​ன. Source link

தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் சிபிஐ விசாரணை

கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை கரூர் நகர போலீஸார் விசாரித்த நிலையில் உயர்நீதிமன்றம் அக். 3-ம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டது. அக். 5-ம் தேதி முதல் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி … Read more

முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார்; நேரு அனுமதிக்கவில்லை – பிரதமர் மோடி

நர்மதா: ‘சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போல், முழு காஷ்மீரையும் நாட்டுடன் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் அப்போதைய பிரதமர் நேரு அதை நடக்க அனுமதிக்கவில்லை’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரான 2014 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) ஆகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள … Read more

அமெரிக்காவில் 33 ஆண்டுக்கு பிறகு அணு ஆயுத சோதனை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் மீண்​டும் அணு ஆயுத சோதனை நடத்​தப்​படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். கடந்த 1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அமெரிக்​கா​வில் முதல் அணு ஆயுத சோதனை நடத்​தப்​பட்​டது. அந்த நாடு இது​வரை 1,054 அணு ஆயுத சோதனை​களை நடத்தி உள்​ளது. கடைசி​யாக கடந்த 1992-ம் ஆண்டு செப்​டம்​பர் 23-ம் தேதி அமெரிக்​கா​வின் நெவாடா அணு சக்தி சோதனை நடத்​தியதில் பூமிக்​கடி​யில் 2,300 அடி ஆழத்​தில் சோதனை நடத்​தப்​பட்​டது. சமீபத்​திய … Read more