கன்னியாகுமரி போறீங்களா.. தண்ணி மேலயே நடக்கிற மாதிரி.. அதென்ன \"கண்ணாடி பாலம்\" திமுக அமைச்சர் அதிரடி

Tamilnadu oi-Hemavandhana சென்னை: கன்னியாகுமரியில் அடுத்த அதிரடியை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.. இதற்கான முக்கிய அறிவிப்பையும் திமுக அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். உலக புகழ் பெற்ற சுற்றுலாதளமான கன்னியாகுமரியில், சுற்றுலா பயணிகள் குவிந்துகொண்டிருக்கிறார்கள்.. திருவேணி சங்கமத்தில் சூரியன் உதயம் காட்சிகளை கண்டுக்களித்து மகிழ்ந்து வருகிறார்கள். அதிகாலை மற்றும் மாலையில் கடலில் சூரியன் உதயம் மற்றும் மறையும் இயற்கை நிகழ்வை கண்டு ரசிப்பதற்காகவும் கடல்நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சவாரி … Read more

குஜராத் ஏர்போர்ட்டில் அனுமதியின்றி இறங்கிய விமானம்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்! பதறிய பயணிகள்!

India oi-Vigneshkumar காந்தி நகர்: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், நள்ளிரவில் நடந்த சம்பவம் பயணிகளிடையே பீதியைக் கிளப்பியுள்ளது. விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய விசாரணை நடத்தப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் விமானத்துறை இப்போது வேகமாக வளர்வது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இருப்பினும், சமீப காலங்களாக விமானத்துறை குறித்து வெளியாகும் தகவல்கள் நன்றாக … Read more

இலங்கை நெருக்கடி.. சத்தமின்றி உள்ளே நுழையும் சீனா.. வாய்ப்பை தவற விட்ட இந்தியா? மிஸ் பண்ணிட்டாங்களே

International oi-Vigneshkumar கொழும்பு: இலங்கை இப்போது மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இந்த சூழலை பயன்படுத்தி சீன பெட்ரோலிய நிறுவனம் இலங்கைக்குள் நுழைந்துள்ளது. நமது அண்டை நாடான இலங்கை இப்போது மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. குட்டி தீவு நாடான இலங்கையில் கடந்தாண்டு முதல் பொருளாதார நெருக்கடி உச்சமடைந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சம் தொட்டது. பல மணி நேரம் மின்வெட்டு இருந்தது. எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு இருந்தது. இந்த … Read more

\"வைகோ\"..அப்பவே கிளியரா சொல்லிட்டாரே.. \"கணேசமூர்த்தி\" திமுக பக்கம் வரப்போறாரா? அனலடிக்குதே மதிமுகவில்

Tamilnadu oi-Hemavandhana சென்னை: மதிமுகவின் மூத்த தலைவர், திமுக பக்கம் வரப்போகிறாராம்.. இதுதான் இணையத்தில் தீயாய் பரவி கொண்டிருக்கிறது.. என்ன நடக்கிறது மதிமுகவில்? வைகோவை பொறுத்தவரை கடின உழைப்பாளி.. மிகச்சிறந்த பேச்சாளர்.. தலைசிறந்த இலக்கியவாதி.. உலக வரலாற்றையே கரைத்து குடித்தவர்.. தனக்கு கிடைத்த பதவிகளையும், தன் கட்சிக்காரர்களுக்கே விட்டுத் தந்த குணாளன்.. தமிழருக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு முதல் ஆளாக வைகோதான் சீற்றத்துடன் நிற்பார்.. தமிழ் வளத்துக்கு ஒரு களங்கம் என்றால், அங்கேயும் வைகோதான் கெத்துடன் … Read more

கோடைக்காலம் என்பதால் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் டூர்! இதில் தவறேதும் இல்லை! -பிரேமலதா விஜயகாந்த்

Tamilnadu oi-Arsath Kan மதுரை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில், இது கோடைக்கால சுற்றுலா என விமர்சனம் செய்திருக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். கடந்தமுறை முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்று வந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை புதிதாக என்ன தொழில் தொடங்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை முன் வைத்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினின் கடந்தகால வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மூலம் … Read more

\"காம நெருப்பு\".. நதியாவை காணோமாமே.. யாரந்த பிரகாஷ்.. போலீசுக்கு ஓடிய கணவர்.. கடைசியில் பார்த்தால்?

Tamilnadu oi-Hemavandhana திருச்சி: நதியாவை காணவில்லையாம்.. அவரது கணவர் எங்கெங்கோ அவரை தேடிக் கொண்டிருக்கிறார்.. போலீசாரும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.. என்ன காரணம்? திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ளது கோம்பைபுதூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் கிருஷ்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி பெயர் நதியா. நர்சிங் கோர்ஸ்: இவர் நர்சிங் படித்துக்கொண்டிருந்தபோது கிருஷ்ணனை காதலித்துள்ளார்.. கிருஷ்ணனும் நதியாவை காதலித்து வந்துள்ளார்.. இந்த நிலையில் 2 பேருமே கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் … Read more

அவங்க காலு உயரம் கூட இல்லன்னு கேலி செய்தாங்க.. என் காலை உடைச்சது 3 போலீஸ்.. குட்டி நாகராஜ் பரபரப்பு

Tamilnadu oi-Vishnupriya R செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மதுபோதையில் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி அலப்பறை செய்த நபர் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி என்றும் அவரை ஒரு போலீஸ்காரர் உருவ கேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த வேப்பஞ்சேரியை சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு 32 வயதாகிறது. ஆயினும் இவர் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளியாவார். இவர் சொந்த ஊரில் பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸார் வாகன … Read more

ஆஸ்திரேலியாவில் சர்ப்ரைஸ் கொடுத்த மோடி.. பிரிஸ்பேனில் அமைகிறது புதிய தூதரகம்

International oi-Halley Karthik கான்பெரா: ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து பணியாற்றும் குவாட் அமைப்பின் முக்கிய கூட்டம் நாளை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இன்று சிட்னியில் புலம் பெயர் மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் … Read more

இவர்தான் ரியல் 'பாஸ்'.. மக்கள் மத்தியில் பிரதமர் மோடியை புகழ்ந்த ஆஸி. பிரதமர்.. நெகிழ்ச்சி சம்பவம்

International oi-Halley Karthik கான்பெரா: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதில் மோடியை, ‘பாஸ்'(Boss) என ஆஸ்திரேலிய பிரதமர் புகழ்ந்திருக்கிறார். ஜப்பானில் ஜி7 நாடுகளின் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அதன் பின்னர் அங்கிருந்து இந்தியா-பசிபிக் தீவுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டது. இதனையடுத்து அங்கிரு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற புலம் பெயர் … Read more

ராஜஸ்தான் பாஜகவிலும் துவங்கிய மோதல்.. முதல்வர் வேட்பாளர் யார்.. இவங்க 2 பேருமா? காங்கிரஸ் குஷி

India oi-Nantha Kumar R ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்னும் சில மாதத்தில் சட்டசபை தேர்தில் நடைபெற உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இது ஊரறிந்த விஷயமாக இருக்கும் நிலையில் தான் முதல்வர் பதவிக்காக அங்கு பாஜகவிலும் உரசல் ஏற்பட்டுள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். மாநில … Read more