சொத்து குவிப்பு வழக்கு..மாஜி சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை
Tamilnadu oi-Jeyalakshmi C புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக்கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பெயரில் 58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார் என விஜயபாஸ்கருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. … Read more