ஆட்சி நடக்கவில்லை சர்க்கஸ் தான் நடக்கிறது.. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும்.. சீறிய ஈபிஎஸ்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் இங்கே ஆட்சி நடக்கவில்லை.. சர்க்கஸ் தான் நடக்கிறது என்றும் கூறியுள்ளார் . விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் விஷசாராயம் வாங்கி குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், கண் … Read more

விஷ சாராய விவகாரம்.. சென்னையில் கெமிக்கல் பேக்டரி உரிமையாளர் கைது..பரபரப்பு தகவல்கள்

Tamilnadu oi-Mani Singh S விழுப்புரம்: விழுப்புரம் விஷ சாராய சம்பவம் தொடர்பாக சென்னையில் கெமிக்டரி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியில் கெமிக்கல் பேக்டரி நடத்தி வரும் இளைய நம்பியிடம் இருந்து ஆயிரம் லிட்டர் மெத்தனால் என்ற விஷ சாராயம் வங்கப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயத்தை பலர் வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. … Read more

நானும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்தது இதற்காகத்தான்..\" போட்டு உடைத்த டிடிவி தினகரன்!

Tamilnadu oi-Mani Singh S சென்னை: நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்து இருந்தோம். ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் நானும் ஓபிஎஸ்சும் ஓய மாட்டோம் என்று டிடிவி தினகரன் கூறினார். மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- ஒரு டிடிவியும் ஒரு ஓபிஎஸ்சும் இணைந்ததற்கே இப்படி பதறுகிறார்கள். பழனிசாமிக்கு நான் சொல்வது எல்லாம் … Read more

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி-ஆக பதவி உயர்வு.. தமிழக அரசு ஒப்புதல்.. முழு விவரம்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 1992 பேட்ச் அதிகாரிகளாக ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகிய 4 அதிகாரிகள் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு டாப் லெவல் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் முதன்மை … Read more

கள்ளச்சாராயம் விற்றவருக்கும் இழப்பீடு அறிவித்துள்ளது தமிழக அரசு.. அண்ணாமலை குற்றச்சாட்டு

Tamilnadu oi-Mani Singh S சென்னை: கள்ளச்சாராயம் விற்றவருக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் விஷசாராயம் வாங்கி குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள … Read more

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி.. விஷ சாராய வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.. டிஜிபி

Tamilnadu oi-Mani Singh S சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி விஷசாராய வழக்குகள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த சனிக்கிழமை விஷ சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷசாராயம் குடித்ததில் … Read more

தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல் முறை.. இதுவரை இல்லாத வெயில் அளவு.. அரக்கோணத்தில் 115 டிகிரி

Tamilnadu oi-Mani Singh S சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வரும் நிலையில், தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மிக அதிகபட்ச வெப்பநிலையாக இன்று அரக்கோணத்தில் 115 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் அனல் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் வெளியில் செல்வதற்கே … Read more

\"கள்ள சாராயம் குடித்து உயிரிழந்த.. குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் ஏன்?\" பொன்முடி விளக்கம்

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் பொன்முடி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் அடுத்துள்ள மரக்காணம் எக்கியார்குப்பம் என்ற பகுதியில் 13ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. அங்கே அமரன் என்ற நபரிடம் இருந்து 50க்கும் அதிகமானோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளார். அதை வாங்கிக் குடித்த கொஞ்ச நாட்களிலேயே … Read more

நான் குஜராத்ல இருக்கேன்.. எனக்கான உணவு கிடைக்காது! ஷமி சொன்னவுடன் வாய்விட்டு சிரித்த ரவி சாஸ்திரி

India oi-Noorul Ahamed Jahaber Ali அஹமதாபாத்: ஐபிலில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமி, குஜராத்தில் தனக்கு பிடித்த உணவு கிடைக்காது என்று தெரிவித்து இருக்கிறார். நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த ஆண்டை போலவே சிறப்பாக விளையாடி வருகிறார்கள். நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி … Read more

சுருட்டி போட்ட மரக்காணம்.. \"அந்த 10 லட்சம்\".. திமுகவை பற்றி கேட்டதுமே.. திருமா சொன்ன பதிலை பாருங்க

Tamilnadu oi-Hemavandhana மதுரை: பாஜகவின் பிரிவினைவாத அரசியலை மக்கள் வெறுத்துவிட்டார்கள் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவுகளே சான்று’என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.. அத்துடன், கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், ”சுற்றி வளைக்குது பாசிசப்படை, வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு” என்ற தலைப்பில் மதுரையில் மாநாடு நடந்தது.. இந்த மாநாட்டில் திருமாவளவன் கலந்து கொண்டு … Read more